Sunday, 2 October 2016

வெஜிடபிள் சமோசா

சமோசா 

தேவையான பொருட்கள்
மைதா மாவு : 125 கிராம்
வற்றல்பொடி : 1½ தேக்கரண்டி
உருளை கிழங்கு : ½ கிலோ
மஞ்சள்பொடி : ¼ தேக்கரண்டி
பச்சைபட்டாணி : 100 கிராம்
பெரிய வெங்காயம் : ¼ கிலோ
மல்லிஇலை : 25 கிராம்
பச்சைமிளகாய் : 2
கடலை எண்ணெய் : ¼ கிலோ
இஞ்சி : சிறுதுண்டு
சீரகம் : ½ தேக்கரண்டி
கரம் மசாலா : 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு : 1 தேக்கரண்டி
உலர்ந்ததிராட்சை : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையானது
கான் ப்ளார் மாவு : 3 தேக்கரண்டி

தாளிக்க‌
சீரகம் : ½ தேக்கரண்டி
கடுகு : ½ தேக்கரண்டி
கருவேப்பிலை:  1 கொத்து

செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.  கான் ப்ளார் மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்து மசித்த‌ உருளைக்கிழங்குடன்  பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, வற்றல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான உப்பு,  கரம் மசாலா வேக வைத்த பச்சை பட்டாணி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, மல்லி ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து பின் கலவையை நன்கு வதக்கி பின்னர் ஆறவைக்கவும்.
பிறகு மைதா மாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி தோசைக் கல்லில் போட்டு சப்பாத்தியின் இருபுறமும் லேசாக வேக வைத்து  ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் கான் ப்ளார் மாவுக் கரைசலைத் தண்ணீர் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு எண்ணெயில் போட்டு பொன் நிறமாகப் பொரித்து எடுத்துக்கொள்ளவும். சுவையான சமோசா ரெடி!
++++++++++++++++++++++++++++
சுவையான வெஜிடபிள் சமோசா
தேவையான பொருட்கள் :

மைதா மாவு  - 250 கிராம்,
உருளைக்கிழங்கு  - 250 கிராம்,
பச்சைப் பட்டாணி  - 50 கிராம்,
பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது  - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள்  - ஒரு டீஸ்பூன்,
முந்திரித் துண்டுகள்  - 10,
சீரகம், சோம்பு  - தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை  - 2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலாத்தூள்  - ஒரு டீஸ்பூன்,
வனஸ்பதி  50 கிராம்,
உப்பு, எண்ணெய் -  தேவையான அளவு.

செய்முறை:

* பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ், நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து நீரை வடிகட்டி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சீரகத்தூள், லேசாக சூடாக்கிய வனஸ்பதி சேர்த்து நன்றாக கலந்த பின் நீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, எட்டு பாகங்களாக செய்து, நீளவாக்கில் தேய்க்க வேண்டும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் முந்திரி சேர்த்து, வறுத்த பிறகு பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் போட்டுக் கிளறிய பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணியை சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி வைக்கவும்.

* நீளமாகத் தேய்த்த மாவினை முக்கோணம் வடிவில் செய்து, உருளைக்கிழங்கு மசாலாவை 3 ஸ்பூன் எடுத்து உள்ளே வைத்து மூடி சமோசாக்கள் செய்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெயை ஊற்றி  சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து, செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான சுவையான வெஜிடபிள் சமோசா ரெடி.

குறிப்பு: சமோசாக்கள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

Wednesday, 24 August 2016

சீடை


வெல்லச் சீடை

தேவையானவை:

சிவக்க வறுத்தரைத்த அரிசி மாவு ..... 1கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு ..... 3 டீஸ்பூன்
வெல்லத்தூள் ..... அரை கப். ( பாகு வெல்லமாக )
பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் .. 2டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் ..... அரை டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி ..... சிறிது
நெய் ..... 2 டீஸ்பூன்.
சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்

செய்முறை .......
ஒரு கப் ஜலத்தில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க
விடவும்.
தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
ஆறியவுடன் தேங்காய், உளுத்தமாவு,நெய், எள், ஏலப்பொடி
சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த மாவை கோலிகளாக ஒரே அளவில் உருட்டி
சுத்தமான துணியில் பரப்பிப் போடவும்.

15,நிமிஷங்கழித்து சீடைகளை காயும் எணெணெயில்
சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++
உப்புச் சீடை

தேவையானவை:
பச்சரிசியை லேசாக வறுத்தரைத்து சலித்த மாவு  ... 2கப்
சிவக்க வறுத்தரைத்த உளுத்த மாவு. சலித்தது ... கால்கப்
ருசிக்கு உப்பு
ஊற வைத்து வடிக்கட்டிய கடலைப் பருப்பு ... 1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் .... 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி .... அரை டீஸ்பூன்
சுத்தப் படுத்திய வெள்ளை எள் .... 1 டீஸ்பூன்
வேண்டிய அளவு எண்ணெய்  ... சீடை வேக வைக்க

செய்முறை ......
உப்பு பெருங்காயத்தைச் சிறிது ஜலத்தில்
கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
அரிசி, உளுத்தமாவைக் கலந்து  சேர்த்து
அழுத்திப் பிசறவும்.
வெண்ணெய்.கடலைப் பருப்பு எள் சேர்த்துக் கலக்கவும்.
உப்பு ஜலம் சேர்த்து சிறிது, சிறிதாக ஜலம் தெளித்து
கெட்டியான, பூரி மாவைப்போல மொத்தையாகக் கலந்து
பிசையவும்.
மாவு கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஒரே சீராக
,சிறிய கோலிகளாக மேலோடு உருட்டி, ஒரு துணியில்
பரவலாகப் போடவும்

10 நிமிஷங்கள் கழித்து , வாணலியில் எணெணெயைக் காய
வைத்து சீடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு
கரகரப்பாக வேகவைத்து சட்டுவத்தால் வடிக்கட்டி எடுக்கவும
டிஷ்யூ பேப்பரில் பரப்பி வைத்து ஆறினவுடன எடுத்து
டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
+++++++++++++++++++++++++++++

Saturday, 6 August 2016

பாரம்பரிய உணவு

மறந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்!!!

குதிரைவாலி எள்ளுசாதம்

தேவையான பொருட்கள்

குதிரைவாலி சாதம் - ஒரு கப்
வறுத்து அரைக்க:
கறுப்பு எள் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
கடுகு,
கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

எள்ளைத் தண்ணீர் விட்டுக் நன்றாக கழுவி கல் இல்லாமல் களைந்து வடிகட்டி, தண்ணீர் இல்லாமல் வையுங்கள்.  வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் எள்ளைப் போட்டு வறுத்தெடுங்கள். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயத்தை வறுத்தெடுங்கள்.  ஆறியதும் மிக்சியில் எள்ளைத் தவிர மற்ற பொருட்களை அரைத்து, கடைசியாக எள்ளைப் போட்டு அரையுங்கள்.  வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றைப்  போட்டு வறுத்து, அதை குதிரைவாலி சாதத்துடன் சேர்த்துக் கிளறுங்கள்.   வறுத்து அரைத்த பொடியையும் தேவையான அளவு சாதத்துடன் கலந்தால் சுவையான குதிரைவாலி அரிசி எள் சாதம் தயார்.⁠⁠⁠⁠

++++++++++++++++++++++++++++++++++++++++

வலுவூட்டும் வரகு கஞ்சி !

சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வரகின் பயன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் வெல்ல‌ப் பணியாரம், அப்பம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலு கிடைக்கும்.

சத்துக்கள் ?
அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.

புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.

எப்படிச் செய்வது?
சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும். பாதி வெந்ததும், உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

தொட்டுக்கொள்ள?
கறிவேப்பிலையைக் கழுவி உதிர்த்து, சிறிது உளுந்து, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த‌த் துவையலுடன் சேர்த்துச் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++
மருத்துவ உணவுகள்..!

பிரண்டைத் துவையல்..!

தேவையானவை:

முற்றாத பிரண்டை - 50 கிராம்,
மிளகு - 20,
பச்சை மிளகாய் - 3,
உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்:

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.
+++++++++++++++++++++++++++++++++++
உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் !

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்
தேவையான பொருட்கள் :

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி(தனியா) - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது
சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
கொத்தமல்லி தழை

செய்முறை :

* கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்.

* பூண்டை ஒன்றும் பாதியாக நசுக்கி கொள்ளவும்.

* வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி (தனியா), சீரகம், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின் அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சத்தான கொள்ளு மிளகு ரசம் ரெடி.

* இந்த ரசத்தை அப்படியே சூப்பாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரசத்தை அடிக்க வைத்து குடிக்கலாம்

++++++++++++++++++++++++++++++++++++
லெமன் பார்லி ஜூஸ்

தேவையானவை

எலுமிச்சை சாறு – 1 கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
பார்லி பவுடர் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
எலுமிச்சை எசன்ஸ் – 2 துளி

செய்முறை

எலுமிச்சை சாறுடன் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மூடி வைக்கவும்.  பார்லி பவுடருடன் குளிர்ந்த நீர் சேர்த்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளவும்.  அதனுடன் தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்கவும்.  மீதமுள்ள சர்க்கரையை சேர்த்துக் கிளறவும்.  சர்க்கரை நன்கு கரைய வேண்டும்.  பிறகு இதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.  ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.  பிறகு வடிகட்டி, இதில் மீதமுள்ள எலுமிச்சை சாறு, எசன்ஸ் சேர்த்து சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.  இது நீண்ட நாட்கள் கெடாது.  தேவைப்படும்போது ஒரு பங்கு ஜூஸுக்கு 3 பங்கு நீர் கலந்து பருகவும்.
+++++++++++++++++++++++++++++

Saturday, 30 July 2016

தோசை



+++++++++++++++++++++++++++++
கம்பு சோள தோசை
தேவையானவை
கம்பு – 100 கிராம்
அரிசி – 200 கிராம்
சோளம் – 50 கிராம்
உளுந்து – 4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
நறுக்கிய காய்ந்த மிளகாய் – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
அரிசி, கம்பு, சோளத்தை 8 மணி நேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து தக்கவும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து போதுமான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மாவை சிறிது நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னியும், வெங்காய சட்னியும் நல்ல காம்பினேஷன்.


Friday, 29 July 2016

சட்னி



+++++++++++++++++++++++++++++++++++++++
கத்திரிக்காய் சட்னி :-
========================
தேவையான பொருட்கள்:-
===========================

பெரிய கத்திரிக்காய் – 5

வரமிளகாய் – 8 (தேவைக்கேற்ப)

உளுந்து – 2 தே. கரண்டி

புளி – சிறிதளவு

உப்பு தேவையான அளவு

சர்க்கரை – 1 தே.கரண்டி (விருப்பமானால்)

கடுகு,உளுந்து,பெருங்காயம் – தாளிக்க

எண்ணை – தாளிக்க

செய்முறை:-
==============

1) கத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும்.

2) மேல் தோல் கறுப்பாக மாறிவிடும், உரிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். ( சுட்டு எடுக்க முடியவில்லையென்றால் ஒரு வாணலியில் போட்டு எல்லா பக்கமும் நன்றாக வறுத்து எடுக்கவும்).

3) கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்.

4) ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் உளுந்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

5) மிக்ஸியில் வரமிளகாய், உளுந்து, புளி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்றாக மசிய அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

6) மசிந்தபின் அதில் உரித்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.

7) ஒரு வாணலியில் எண்ணைவிட்டு அதில் கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின்னர் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறிவிடவும். மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.

8)இது இட்லி, தோசைக்கு அருமையாக சேரும்.
++++++++++++++++++++++++++++++++++
கடலைப்பருப்பு சட்னி
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1/2 கப்

தேங்காய் துண்டுகள் – 1 கையளவு

வர மிளகாய் – 3

தக்காளி – 1

கறிவேப்பிலை – சிறிது

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

:செய்முறை:
                   முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வர மிளகாய், தேங்காய், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!
++++++++++++++++++++++
கத்திரிக்காய் சட்னி:          
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய்  – 2 பெரியது
சின்ன வெங்காயம்  – 15  அல்லது பெரிய வெங்காயம்  – 1
தக்காளி  – 1
வர மிளகாய்  – 4
புளி  – சிறிய  நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவியது  – 3  மேசைக்கரண்டி
உப்பு  – தேவையான அளவு
எண்ணெய்  – 1  தேக்கரண்டி
செய்முறை
கத்திரிக்காய், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
இறுதியாக தேங்காய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
சூடு ஆறிய பின்பு புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
குறிப்பு
கத்திரிக்காய் சட்னி சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

பிரியாணி



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சேமியா பிரியாணி.

தேவையான பொருட்கள்:
சேமியா – 200 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
கேரட் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
பட்டாணி – 25  கிராம்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 1 பல்
பட்டை – 2  துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2  தேக்கரண்டி
செய்முறை
சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டு
தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு காரட், பீன்ஸ், பட்டாணி  மற்றும் தேவையான  அளவு  உப்பு ,தண்ணீர் சேர்த்து
காய்களை முக்கால்வாசி வேகவிடவும்.
200 கிராம் சேமியாவுக்கு  400 கிராம் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி கிளறி இறக்கவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கத்தரிக்காய்  பிரியாணி:-
தேவையான பொருட்கள்:-
அரிசி - 1 கிலோ
கத்தரிக்காய்  - 1 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
வொங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
பட்டை - 10
லவங்கம் - 10
ஏலக்காய் - 10
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எலும்மிச்சை – 1
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு)
நெய் - 50 கிராம் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு
அரைக்க வேண்டியவை:-
இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.
பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்
செய்முறை:-
1) ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
2) அதனுடன் கத்தரிக்காய் சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கத்தரிக்காய்க்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
3) அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
4) முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு,  எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.
5) 5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

6) கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான கத்தரிக்காய்  பிரியாணி தயார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

கலந்த சாதம் Variety Rice


கோவைக்காய் சாதம்:-
======================
தேவையான பொருட்கள்:-
========================

சாதம் - 1 கிண்ணம்
கோவைக்காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
வறுத்து பொடிக்க:-
-----------------------------

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
கெட்டி பெருங்காயம் - ஒரு சிறு மிளகு அளவு (தூளாக இருந்தால் - ஒரு சிட்டிகை)
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
 
தாளிக்க:-
--------------

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:-
============
1) கோவைக்காயை நன்றாகக் கழுவி விட்டு, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

2) தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காயை, தனித்தனியாக பரப்பி வைக்கவும்.

3) அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு, அவ்வப்பொழுது திருப்பி விட்டு சிவக்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். (மைக்ரோவேவ் அவனிலும் வதக்கி எடுக்கலாம்).
 
4) வெறும் வாணலியில் வெள்ளை எள்ளைப் போட்டு சிவக்கும் வரை அல்லது பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

5) அதே வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் பெருங்காயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப்போட்டு சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும்.
 
6) ஆறியதும், அத்துடன் வறுத்து வைத்துள்ள எள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
 
7) ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.

8)பின் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும்.

9) கறிவேப்பிலையையும் போட்டு சற்று வறுத்து, அதன் பின் வதக்கி வைத்துள்ள கோவைக்காய் துண்டுகள், மஞ்சள் தூள்,  ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.

10) பின்னர் அதில் சாதத்தைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும்.


11) கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி, ஒரு டீஸ்பூன் எண்ணையையும் விட்டு நன்றாகக் கலந்து இறக்கி வைக்கவும்
+++++++++++++++++++++++++++++++++
மிளகு சாதம்:-
==============
தேவையான பொருட்கள்:-
========================

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:-
=============
1) அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.

2) ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

3) அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுக்கவும்.

4) சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்தெடுக்கவும்.

5) மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

6) இன்னொரு வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.

7) அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும்.

8)அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

9) அப்பளத்துடன் பரிமாறவும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்னாசி சாதம்:-
=================
தேவையான பொருட்கள்:-
========================

சாதம் - 1 கிண்ணம்
அன்னாசிப்பழம் (சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 கப்
வெங்காயம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 3 அல்லது 4 பற்கள்
கொத்துமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு (கொரகொரப்பாகப் பொடித்தது) - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:-
=============
1) வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2) அடி கனமான வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும்.  அதில் அன்னாசிப்பழத் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.

3) அத்துடன் இஞ்சி, பூண்டு துண்டுகளைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கியபின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

4) பின்னர் கொத்துமல்லி, புதினா இலைகளைச் சேர்த்து சற்றி வதக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.  அதில் 2 அல்லது 3 கை நீரைத் தெளித்து மூடி வைத்து சிறு தீயில் சில வினாடிகள் வேக விடவும்.

5) பின்னர் மூடியைத் திறந்து, நீர் வற்றும் வரை கிளறி விடவும்.  அதில் சாதத்தைப் போட்டு, அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி, அடுப்பை சற்று பெரிய தீயில் வைத்து, ஓரிரு கிளறு கிளறி இறக்கி வைக்கவும்.

6) இறக்கி வைத்தப் பின் எலுமிச்சை சாறைச் சேர்த்து கிளறி, கொத்துமல்லி இலைத் தூவி பரிமாறவும்..
++++++++++++++++++++++++++++++++
புதினா சாதம்:-
==============
தேவையான பொருட்கள்:-
========================

அரிசி - 2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:-
---------------

புதினா இலை - 2 கப்
கொத்துமல்லி இலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - 1" துண்டு
பூண்டு பற்கள் - 2

தாளிக்க:-
---------------

எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
முழு ஏலக்காய் - 2
பட்டை இலை - சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
============
1) அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

2) வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3) புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

4) பிரஷ்ஷர் குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பட்டை இலை, சோம்பு அக்கியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.

5) பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

6) பின்னர் அதில் அரிசியை தண்ணீரை நன்றாக வடித்து விட்டு போடவும். அத்துடன் தேங்காய் பால், மூன்று கப் தண்ணீர் (தேங்காய் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.)

7) விட்டு கிளறி விடவும். மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும்.

8)சற்று ஆறிய பின் குக்கரைத் திற்ந்து, எலுமிச்சம் சாறு சேர்த்து கிளறவும்.

9) அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாறவும்..

குறிப்பு:-
========
#இதை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். எண்ணைக்குப் பதில் நெய்யையும் சேர்க்கலாம். தேங்காய்பால் சேர்க்காமல், வெறும் தண்ணீரிலும் செய்யலாம்.

குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்..
++++++++++++++++++++++++++++++++
தேங்காய் சாதம்:-
=================
தேவையான பொருட்கள்:-
=========================

அரிசி - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:-
=============
1) அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.

2) ஒரு தட்டில் சாதத்தைக் கொட்டி, சிறிது தேங்காய் எண்ணையை அதன் மேல் விட்டு பரப்பி விடவும்.

3) ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

4) பின் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (நறுக்கியது), கறிவேப்பிலைச் சேர்த்து, சிறிது வறுக்கவும்.

5) பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்..

குறிப்பு:-
========
# இதில் வேர்க்கடலை, சிறிது இஞ்சி ஆகியவற்றையும் சேர்க்கலாம். தாளிப்பதற்கு, எந்த எண்ணையையும் உபயோகப்படுத்தலாம். ஆனால், தேங்காய் எண்ணையில் தாளித்தால்தான் உரிய சுவை கிடைக்கும்..
+++++++++++++++++++++++++++++++++++
உருளைக்கிழங்கு சாதம்:-
========================
தேவையான பொருட்கள்:-
=========================

அரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
காய்ந்தமிளகாய் - 2
தனியா விதை - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 5
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:-
=============
1) அரிசியை வேகவைத்து, சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

2) உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3) வாணலியில் சிறிது எண்ணை விட்டு, தனியா, பருப்புகள், மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுத்து, ஆறியவுடன், உப்பையும் சேர்த்துப் பொடி செய்துக் கொள்ளவும்.

4) அதே வாணலியில், மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிறிது வறுக்கவும்.

5) பின் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும். அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்க்கவும். நன்றாகக் கிளறி விடவும்.

6) கடைசியில் சாதத்தைப் போட்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய்யையும் விட்டு, மீண்டும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்..
+++++++++++++++++++++++++++++++++++
நெல்லிக்காய் சாதம்:-
====================
தேவையான பொருட்கள்:-
========================

சாதம் - 2 கப்
நெல்லிக்காய் - 2 முதல் 3 வரை
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:-
============
1) நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும். அல்லது துண்டுகளாக நறுக்கி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

2) பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3) ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டி சிவக்க வறுக்கவும்.

4) பருப்பு சிவந்ததும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவிய அல்லது அரைத்த நெல்லிக்காயைப் போட்டு மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.

5) பின்னர் அதில் உப்பு, சாதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கும் முன் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

6) காய்கறி கூட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

7) காரம் தேவையென்றால், பச்சை மிளகாயை நெல்லிக்காயுடன் அரைத்து சேர்க்கவும். எப்படி சாப்பிட்டாலும் விட்டமின் சி மிகுந்த அருமையான சாதம் இது..