Wednesday, 13 July 2016

கூழ்

கோடைக்காலத்துக்கு ஏற்ற, மிக சத்துள்ள உனவு இது..
கேப்பைக் கூழ்;-  தேவையானவை:- கேழ்வரகு மாவு - 1 கப், தண்ணீர் - 4 கப், உப்பு - 1 சிட்டிகை.  செய்முறை:-  கேப்பை மாவில் தண்ணீர் சேர்த்துக் கரைத்து அப்போதே அடுப்பில் வைத்துக் கிண்டவும் . கூழ் ஒட்டாத பதம் வந்ததும் ( கண்ணாடி போல மின்னும்). இறக்கி உப்பு சேர்க்கவும்.  அதை 3 பாகமாக பிரித்து ஒரு பாகத்தில் நெய்யும் சீனியும் சேர்த்து உண்ணவும்.  இன்னொரு பாகத்தில் மாவத்தல் பருப்புக் குழம்பு சேர்த்து உண்ணலாம்.  மூன்றாம் பாகத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்து கீரைப் பொரியல் அல்லது மசியல் சேர்த்து உண்ணலாம்.  

அல்லது கேப்பை மாவில் தண்ணீரை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும். இரவு புளித்ததும் மறுநாள் காலையில் கிண்டி தயிர் உப்பு சேர்த்து சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து உண்ணலாம்.

No comments:

Post a Comment