Wednesday, 29 June 2016

பானம் டீ

ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்!

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்.

துளசி இலை டீ:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம்பூ டீ:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ:

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ:

புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கைக் கீரை டீ:

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

குறிப்பு:

டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

Saturday, 25 June 2016

Veg Items



கொத்தமல்லி வடை,மசாலா பால், மாம்பழ மோர்க்குழம்பு, கொண்டைக்கடலை பிரியாணி, கத்தரி முருங்கை பால் குழம்பு, உடல் பருமன் அடைய, திப்பிலி ரசம், திரிகடு சூரணம், உள்ளித்தீயல், பாகற்காய் ஊறுகாய், இஞ்சி அல்வா, திரிகடுக ரசம், கொண்டக்கடலை  வடை, கறுப்பு உளுந்து அடை, வெங்காய குருமா, குதிரைவாலி பிரியாணி, நவதானிய தோசை, எள்பொடி, கும்மாயம் இனிப்பு பலகாரம், முளைகட்டிய பயறு தோசை, முறுக்கு, அதிரசம், தேன் - தினை மாவு லட்டு, தினை மாவு அடை, சத்து மாவு பொடி, செட்டிநாடு காய்கறி பிரியாணி, 


கொத்தமல்லி வடை

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
கொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மாங்காய் தூள், மிளகாய் தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னறிமாக பொரித்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி வடை ரெடி! சாப்பிட்டு மகிழுங்கள்.!!


மசாலா பால்

தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பாதாம் - 4
பிஸ்தா - 6
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 1 (தட்டிக் கொள்ளவும்)
குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

முதலில் பாதாம் மற்றும் பிஸ்தாவை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, தோலுரித்து பொடியாக நறுக்கி அல்லது அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் 1 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காயை எடுத்துவிட வேண்டும். பின்பு அதில் குங்குமப்பூ பால், மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், சுவை!

மசாலா பால் உடலுக்கு நல்லது. இதற்கு இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் தான் காரணம்.


மாம்பழ மோர்க்குழம்பு

தேவையானவை:
மாம்பழம் - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்பொடி - சிறிது
அரைக்க:
தேங்காய் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - கால் டீஸ்பூன்
பச்சரிசி - 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். தயிருடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கடைந்து கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், பச்சரிசி முதலியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் விழுது, கடைந்த தயிர் முதலியவற்றை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மாம்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து மோர்க்குழம்பில் ஊற்றி இறக்கவும்.

பி.கு. தயிர் சேர்த்தவுடன் அதிகம் கொதிக்க விடக் கூடாது. தயிர் திரிந்து விடும்.


கொண்டைக்கடலை பிரியாணி

தேவையான பொருட்கள் :

கொண்டைக்கடலை – 1/2 கப்
பாஸ்மதி அரிசி – 2 கப்
தயிர் – 1/2 கப்
வெங்காயம் – 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி அளவு
எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
பிரியாணி மசாலா – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் + நெய் – 1 மேஜை கரண்டி
பட்டை – 1, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1

செய்முறை :

• வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். கொண்டைக்கடலை 5 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு 5 விசில் வரும் வரை போட்டு வேகவைத்து கொள்ளவும்.

• குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• இத்துடன் வேகவைத்துள்ள கொண்டைக்கடலை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா நன்றாக சேர்த்து கிளறவும். பிறகு தயிர் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு அரிசியினை கழுவி தண்ணீர் இல்லாமல் இதில் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

• இத்துடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன் குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.

• குக்கரில் பிரஸர் அடங்கியதும் அதனை திறந்து அத்துடன் 1 தேக்கரண்டி நெய், எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு முறை கிளறிவிடவும்.

• சுவையான சத்தான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி. இதனை ராய்தா, உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கத்தரி முருங்கை பால் குழம்பு

கத்தரிக்காய் - 3
முருங்கைக்காய் - 2
தனியா, சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் - 1
புளி, கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 குழி கரண்டி

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மிளகாய், சீரகம், தனியா மூன்றையும் லேசாக எண்ணெய் விட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுக்கவும். கத்தரிக்காய், முருங்கைக்காயை நறுக்கி சிறிதளவு தேங்காய்ப் பாலில் போட்டு வைக்கவும். புளியைக் கரைத்து, கொதிக்க விடவும். அதில் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் நல்லெண்ணெய் சேர்க்கவும். பிறகு பாலில் ஊறப்போட்டுள்ள காய்களைச் சேர்த்து, வேக வைக்கவும். காய்கள் வெந்ததும் மஞ்சள்தூள், தேங்காய்ப்பால், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

சாதம், டிபன் வகைகள் இரண்டுக்கும் இந்தப் பால் குழம்பு ஏற்றது.


உடல் பருமன் அடைய:

கறுப்பு எள், வேர்க்கடலை, கறுப்பு உளுந்து
உலர்ந்த திராட்சை, பனைவெல்லம்.

அனைத்தையும் நன்றாக அரைத்து மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால், இளைத்த உடல் பருக்கும். அத்துடன் விந்து வீர்யம் அடைந்து, உறவில் நாட்டம் அதிகரிக்கும்.

மேலும் உடல் போஷாக்கு:
பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, அக்ரூட் பருப்பு (Walnut), பிஸ்தா பருப்பு;
வெள்ளரி விதை, பூசணி விதை, முருங்கை விதை;
அத்திப் பழம், நெல்லிக்கனி, பேரீச்சம்பழம்;
பால்முதப்பன் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, நிலப் பூசணி;
முருங்கைப் பூ, முருங்கை பிசின்;
சர்க்கரை, பசும்பால்;


திப்பிலி ரசம்

தேவையான பொருட்கள் :

கண்டந்திப்பிலி – 10 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – 2
புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

நெய்  – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

* வாணலியில் கண்டந்திப்பிலி, சீரகம், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவைகளை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

* புளியை கரைத்து பாத்திரத்தில் கொட்டி கொதிக்கவிடுங்கள். நன்கு கொதிக்கும்போது அரைத்து வைத்துள்ள பொடியைகொட்டி, லேசாக கொதிக்க விடுங்கள்.

* கடைசியாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து கொட்டுங்கள்.

* கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது. சளி, இருமலுக்கு நல்ல மருந்து. பிரசவித்த பெண்கள் இந்த ரசத்தை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும். உடல்வலி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


திரிகடு சூரணம் :

தேவையான மருந்துகள்:
1. சுக்கு – சுந்டீ - 10 கிராம்
2. மிளகு – மரீச்ச - 10 “
3. திப்பிலி – பிப்பலீ - 10 “

குறிப்பு : சுக்குக்கு புற நஞ்சு எனவே - சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

செய்முறை : இவைகளை முறைப்படி பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு : ½ முதல் 1 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.

அனுபானம் : தேன், நெய், தண்ணீர்.

தீரும் நோய்கள் :

விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவிதகாய்ச்சல்கள் (ஜ்வர), வயிற்று உப்புசம் (ஆத்மான), உணவில் விருப்பமின்மை (அரோசக), பசியின்மை (அக்னி மாந்த்ய), பழுதடைந்த செரிமானத்தால் வரும் நோய்கள் (ஆமதோஷ), கழுத்தில் தோன்றும் நோய்கள் (காலரோக), பீனிசம் (பீனஸ), தோல் நோய்கள் (குஷ்ட), இருமல், ஜலதோஷத்துக்கு சர்க்கரை மற்றும் தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை :

திரிகடு என்ற இந்த திரிகடுகு -பல மருந்துக்கு துணை மருந்தாக அனுபானமாக உபயோகப்பதுண்டு.

திரிகடுகு - சிறந்த கார்ப்புள்ளது - நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது ,நெஞ்சு சளி , ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் ,இம்மண்டல பலஹீனத்தை போக்கும், நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும் ,புதுப்பிக்கும் ,கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும், பெண்களின் கரு முட்டை வெடித்தல் குறைபாடு உள்ளவர்களுக்கு பட்டு கருப்புடன் கொடுத்தல் சிறந்தது ,ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் -திரிகடு சார்ந்த ஷட்தர்ணம் சூரணத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம்.

மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள் ,Thyroid குறைவாக சுரக்கும் நோயாளிகள் ,உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள் ,மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து -தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும் செரிமான சுரப்பி ,வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் -எப்படி இருந்தாலும் சரி செய்து -ந்யூற்றிசன் என்ற சக்தி குறைபாடில்லாமல் ,எல்லா குடல் உறிஞ்சுகளையும் வேலை செய்யவைத்து ,உடல் சக்திகளை வேலை செய்யவைக்கும் .

வலிகளை போக்கும் மருந்துகளில் -இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும். பல பற்ப ,செந்தூரங்களை கொடுக்கும் போது -த்ரிகடுவை மூல மருந்து சூரணமாக பயன் படுத்தலாம்.ஆனால் பொடிவடிவில் கிடைக்கும் சூரணமே சிறந்த பலன் அளிக்கும்

திரிகடுகு சேராத ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தே இல்லை எனலாம்


உள்ளித்தீயல்
******

சிறிய வெங்காயம் 150 கிராம்,
தேங்காய் 1, காய்ந்த மிளகாய் 10,
மல்லி  2ஸ்பூன், மஞ்சள்  25 கிராம்,
புளி  சிறிய எலுமிச்சை அளவு,
சீரகம் கால் ஸ்பூன்,
கடுகு கால் ஸ்பூன்,
பெருங்காயம் 1 சிட்டிகை,
வெந்தயப்பொடி  1 சிட்டிகை.
கறிவேப்பிலை, எண்ணெய்,
உப்பு  தேவையான அளவு.

*வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தேங்காயை துருவி, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். புளியை ஊறவைத்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

*7 காய்ந்த மிளகாய், மல்லி, மிளகு, சீரகத்தை வாசம் வரும்வரை வறுத்து, ஆறியபின் தேங்காயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அம்மியில் அரைத்தால் நல்லது.

*வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மீதமுள்ள காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயப்பொடி போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைக் கொட்டி வதக்குங்கள். வெங்காயம் சிவந்ததும், மஞ்சள் தூள், உப்புப்போட்டு, கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி கொதிக்க விடுங்கள்.

*பிறகு, அரைத்த பொருட்களைக் கொட்டி கிளறி சிறிதுநேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் வாசமும், சுவையும் மிகுந்த உள்ளித்தீயல் ரெடி.


பாகற்காய் ஊறுகாய்

தேவையானவை:
பாகற்காய் – 2,
எலுமிச்சம்பழம் – 4,
உப்பு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 10.

செய்முறை: பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான ஊறுகாய் கிடைக்கும்.


இஞ்சி அல்வா

 100 கிராம் இஞ்சியைத் தோல்சீவி அரைத்து, அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். அந்தச் சாறில் விதை நீக்கிய 10 பேரீச்சம்பழம் ஊறவிடவும்.

2 கப் பொடித்த வெல்லம் வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். 2 கப் பொடித்த வெல்லம் கசகசாவை லேசாக தண்ணீர் சேர்த்து மை போல அரைத்தெடுக்கவும். ஊறிய பேரீச்சம்பழத்தை அந்தச் சாறோடு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.

அந்த விழுதோடு, வெல்லத்தண்ணீர், கசகசா விழுது சேர்த்து, வாணலியில் 2 டீஸ்பூன் நெய்விட்டுக் கிளறவும்.

அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, தொடர்ந்து கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கி ஒரு டீஸ்பூன் ஏலக்காய்தூள் தூவவும்.


திரிகடுக ரசம்.

ஊளைச்சதை குறைந்து, உடல் பொலிவோடு திகழ சமயசஞ்சீவி
தேவையானவை:
கொள்ளு – அரை கப்,
சுக்கு – 10 கிராம்,
மிளகு – 10 கிராம்,
திப்பிலி – 5 கிராம் (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்),
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:ஒரு டம்ளர் தண்ணீரில் கொள்ளைப் போட்டு, 5 நிமிடம் கொள்ளு வெந்ததும் அந்தத் தண்ணீரை வடித்துவைத்துக் கொள்ளவும். திப்பிலியை வெறும் வாணலியில் வறுத்து, சுக்கு, மிளகுடன் சேர்த்து மிக்ஸியில் ‘கரகர’ப்பாகப் பொடிக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு (கரைக்கக் கூடாது), அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும், தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுக்கவும். புளி கொதித்த தண்ணீரையும் கொள்ளு வேகவைத்த தண்ணீரையும் கலந்து, அதோடு தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும். பொடித்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க விடவும் (அதற்கு மேல் கொதித்தால் சுவை மாறிவிடும்). எண்ணெயில் கடுகு, சீரகம் தாளிக்கவும்.


கொண்டக்கடலை  வடை

தேவையானவை

கொண்டக்கடலை – கால் கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பச்சைமிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
வாழைப்பூ – ஒன்று
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – அரை லிட்டர்
செய்முறை


கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து விடவும்.
அதன்பின் கொண்டைக்கடலை கடலைப்பருப்பு இஞ்சி பச்சைமிளகாய் உப்பு ஆகியவற்றை சேர்த்து மசால்வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.
வாழைப்பூவை சிறிதாக நறுக்கி மோரில் ஊறவைத்து கொள்ளவும்.
பிறகு எடுத்து அரைத்து மாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
அத்துடன் வெங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதை மசால் வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


கறுப்பு உளுந்து அடை

புரதச் சத்து மிக்க
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி      - 250 கிராம்
கறுப்பு உளுந்து - 100 கிராம்
துவரம்பருப்பு - 1 கப்
வெங்காயம் - பெரியது 2
காய்ந்த மிளகாய் -  5
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும

உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, வெங்காயம் சேர்த்துக் அடை மாவு பதத்தில் தயாரிக்கவும்.

• தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.


வெங்காய குருமா

சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 20 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது - 20 கிராம்,
தேங்காய் - 2,
கடலை எண்ணெய் - 50 மி.லி.
கொத்தமல்லி தூள் - 5 கிராம்,
மஞ்சள் தூள் - 5 கிராம்,
நெய் - 10 மி.லி,
முந்திரி - 30 கிராம்,
முழு கரம் மசாலா-3 கிராம்,
கொத்தமல்லி - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

1. சின்ன வெங்காயத்தின் தோலை உரித்தெடுத்து, இத்துடன் தேங்காய்  மற்றும் முந்திரியை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி அதில் கரம் மசாலா, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும்.
4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து முழுமையாக வேக வைக்கவும்.
5. இந்தக் கலவையுடன் அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.
6. இதில் நெய், உப்பு சேர்க்கவும். அதன் மேல் கொத்தமல்லி இலை, வறுத்த கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.


குதிரைவாலி பிரியாணி

300 கிராம் - பீன்ஸ்,
கேரட், 100 கிராம் - வெங்காயம்,
தக்காளி, காலிஃபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

4 கப் குதிரைவாலி அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு, ஏலக்காய், லவங்கப்பட்டை, வெங்காயம், பூண்டு, இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், டீஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இதில், அரிசியைக் கொட்டிக் கிளறி, ஏழரை கப் தண்ணீர் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவைக் கலந்து கிளறி, குக்கரை மூடவும். மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கி நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்


நவதானிய தோசை
***********

5 மணி நேரம் ஊறவைத்த பாசிப்பயறு 1/4 கப், கருப்பு உளுத்தம்பருப்பு 1/4 கப், கொண்டைக்கடலை 1/4 கப், பச்சரிசி 1/4 கப், துவரம்பருப்பு 1/4 கப், எள்ளு 1 ஸ்பூன்,

தேங்காய் துருவல், 3 பச்சை மிளகாய், 6 காய்ந்த மிளகாய், துண்டு இஞ்சி, கறிவேப்பிலை, அரை டீஸ்பூன் பெருங்காயம், தேவையான உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.


எள்பொடி:

எள் ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடியது

எள் 1 கரண்டி
கடலை பருப்பு 3 கரண்டி
வத்தல் 4
கறிவேப்பிலை
பெருங்காயம் சிறிது
தோலுடன் பூண்டு 5

அணைதையும் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் உண்டாகும்.


கும்மாயம் இனிப்பு பலகாரம்

தேவையான பொருட்கள்

நெய் (1/4 கப்)
சர்க்கரை (பனங்கட்டி சர்க்கரை) – (2 கப்)
நீர் (6 கப்)
செய்முறை

கும்மாயம் பொடி: பச்சை பயறு (1 கப்), உளுந்து (2 மே.கரண்டி), அரிசி (4 மே.கரண்டி) ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுத்து மிக்சியில் இட்டு அரைத்து பொடியாக்கி அரித்து வைக்கவும்.

பாத்திரத்தை வாணலியில் வைத்து அரைப்பங்கு நெய்யினை ஊற்றி கும்மாயம் பொடியினை அதனுள் விட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரையும் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி வடித்து வைக்கவும். இந்த சர்க்கரை பாகினை வதங்கும் கும்மாயம் பொடியினுள் விட்டு நன்கு கலக்கவும்.

கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும். மீதி நெய்யினையும் இதனுள் ஊற்றி கிளறவவும். பாத்திரத்தில் நன்கு கும்மாயம் சுண்டும் வரை கிளறி விட்டு எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி பரவவும். இதனை சூடாகவோ குளிராகவோ பரிமாறலாம். சதுர துண்டுகளாக வெட்டியும் பரிமாறலாம்.


முளைகட்டிய பயறு தோசை

பச்சை பயறை ஒரு இரவு ஊறப்போட்டு ஒரு வெள்ளைத்துணியில் வைத்து கட்டி வைத்துவிட்டால் மறுநாள் முளை வந்துவிடும். பச்சைபயறு, தட்டப்பயறு, பட்டாணி, கொண்டைக்கடலை உள்ளிட்ட நவதானியங்கள் அனைத்தையும் இந்த தோசைக்கு தனியாகவோ, சேர்த்தோ பயன்படுத்தலாம்.

தேவை

முளைகட்டிய பயறு - கால் படி
பச்சரிசி - 200 கிராம், சீரகம் - 50 கிராம்
மிளகு - 35 கிராம், வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியை ஊற வைத்து அதோடு முளைகட்டியப் பயறைச் சேர்த்து அரைத்து உப்புப்போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெலிதாக வெட்டிக் கொள்ளுங்கள். சீரகம், மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். மாவை ஊற்றி மேலே வெங்காயம், மிளகுத்தூள், சீரகத்தூளைத் தூவி வேகவிட்டு எடுங்கள். முளைகட்டியப் பயறு தோசை தயார்.


உடனடி முறுக்கு கலவை
முறுக்கு
பச்சரிசி மாவு   -   50 கிராம்
சாமை மாவு     -   50 கிராம்
பொட்டுகடலை மாவு - 10 கிராம்
மிளகாய் தூள்     -  1.5 கிராம்
சீரகம்     -   4 கிராம்
உப்பு  -   5 கிராம்
வெண்ணெய்   -  10 கிராம்
பெருங்காயம்   -  1 கிராம்

செய்முறை
அரிசி மற்றும் குறுந்தானிய மாவு, பொட்டுகடலை மாவு ஒன்றாக கலந்து 60 பி.எஸ் சல்லடையில் சலிக்கவும்.  மீதமுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து கலக்கவும்.
மாவுடன் 50 மிலி நீர் சேர்த்து பிசைந்து பிழிவானில் 4 மி.மி அளவுள்ளதில் பிழிந்து எண்ணெயில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 நிமிடம் பொறிக்கவும்.  ஆறிய பின்பு பாலித்தீன் பையில் போட்டு மூடவும்


அதிரசம்

தேவையான பொருட்கள்
அதிரசம்
அரிசி மாவு    -     70 கிராம்
சாமை மாவு   -     30 கிராம்
வெல்லம்       -    100 கிராம்
இஞ்சி பொடி -    0.35
ஏலக்காய் பொடி   -  0.35
உப்பு -  0.10
சோடியம் பை கார்பனேட்   -   0.10
எண்ணெய்   -  100

செய்முறை

பச்சரிசி மற்றும் சாமை சுத்தம் செய்து 30 நிமிடம் நீரில் ஊறவைக்கவும்.  நீரை வடிகட்டி நிழலில் 30 நிமிடம் உலர்ததவும்.  பின்பு  அரைத்து சலிக்கவும்.
வெல்லத்தை பொடித்து 20 மிலி நீர் சேர்த்து கரைத்து மஸ்லின் துணி கொண்டு வடிகட்டி 80 டிகிரி பிரிக்ஸ் கொண்டு வரவும்.
மாவுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து ஒர் இரவு முழுவதும் அறை வெப்பநிலையில்  புளிக்கவைக்கவும்.
எண்ணெய் தடவிய பாலிதீன் சுவரில் 50 கிராம் புளித்த மாவை வைத்து 6 செ.மீ தடிமனுக்கு தட்டவும்.  நடுவில் 4 மி.மீ அளவில் சிறிது ஒட்டை செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.  180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 2-3 நிமிடங்கள் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்கவும்.


தேன் - தினை மாவு லட்டு
********
உடைத்த ரவை மாதிரி இருக்கும் தினை அரிசி.
தினை, ரவை - தலா 100 கிராம்.
நெய் - 100 கிராம்,
சர்க்கரை - 200 கிராம் (பொடித்தது),
பாதாம் பருப்பு அல்லது முந்திரி-தேவைக்கு ஏற்ப,
ஏலக்காய் தூள்- சிறிது,
தேன் - 100 கிராம்.

காதி கடைகளில் தினை அரிசி என்று கிடைக்கும். தினையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் போட்டு  வாசனை வரும் வரை வறுக்கவும். ரவையையும் வறுக்கவும். பின் ஆற வைத்து ரவை, தினை, ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். பின்  சர்க்கரையையும் சேர்த்து அரைக்கவும். பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். சிறிது நெய்விட்டு முந்திரிப் பருப்பையும் ஒன்றிரண்டாக  உடைத்து வறுத்து சேர்க்கவும். பின் நெய்யை நன்றாக சூடு செய்து கலவையில் கொட்டி கலந்து, தேன் சேர்த்து கலந்து சிறு, சிறு உருண்டையாகப்  பிடித்து பரிமாறவும்.


தினை மாவு அடை

தினை மாவு - ஒரு கப் (சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்)

கடுகு-சிறிதளவு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்து - தலா கால் கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து பின் நன்றாக கழுவி அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அடை மாவில் கொட்டிக் கலக்கவும்.

* கடைசியாக அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.


சத்து மாவு பொடி
********
1. கேழ்வரகு - 250 கிராம்
2. கம்பு - 250 கிராம்
3. சோளம் - 200 கிராம்
4. மக்காச்சோளம் - 200 கிராம்
5. சம்பா கோதுமை - 10 கிராம்
6. பாசி பயிறு - 10 கிராம்
7. ஜவ்வரிசி - 10 கிராம்
8. வேர்கடலை - 10 கிராம்
9. முந்திரி - 10 கிராம்
10. பாதாம் - 10 கிராம்
11. பொரிகடலை - 10 கிராம்
12. சிகப்பரிசி - 10 கிராம்
13. ஏலக்காய் - 5


அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஆறவைக்கவும்.
பின் மிஷினில் கொடுத்து பொடியாக்கி ஆறவைத்து கொள்ளவும்.
இதை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சலாம்.

செட்டிநாடு காய்கறி பிரியாணி

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – அரைகிலோ
பீன்ஸ், கேரட்,  காளிஃபிளவர் போன்ற காய்கறிகள்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 6
பச்சை மிளகாய் – 5
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
தண்ணீர் – 3 கப்
கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ் பூன்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீ ஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
கிராம்பு – 5
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 3
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 3 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

பிரியாணி செய்முறை
அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும். முதலில் காய்கறிகள்  சிறிதளவு உப்பு, ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் அரைகப் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

பின்னர் காய்கறிகள் தனியாக எடுத்து வைக்கவும்.குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.இத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலாதூள், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். நன்றாக குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த                        
காய்கறிகள் சேர்த்து கிளறவும்.இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும். இப்போது அதன் மேல் புதினா, மல்லித்தழை தூவி, ஒரு டீ ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் தம் போடவும். சாதம் முழுதாக வெந்ததும் இறக்கவும். சுவையான செட்டிநாடு காய்கறி பிரியாணி தயார். இத்துடன் தயிர் ரைதா தொட்டுக்கொள்ள இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

Non Veg / NV Items



++++++++++++++++++++++++++++++
கார்லிக் சிக்கன்(Fry):-
======================
தேவையான பொருட்கள்:-
===========================

கோழி                  – 1 கிலோ
பூண்டு                  – 30 பல்
அரிசி மாவு            – 3 மேசைக்கரண்டி
சோள மாவு            – 3 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல்       – 10
சின்ன வெங்காயம்     – 4
தக்காளி                        – 1
சோயா சாஸ்           – 1 தேக்கரண்டி
சர்க்கரை               – 1 தேக்கரண்டி
சோயா சாஸ்    – 1 தேக்கரண்டி
எண்ணெய்              – 2 தேக்கரண்டி
எண்ணெய்              – பொறிப்பதற்கு
உப்பு                   – தேவையான அளவு

செய்முறை:-
============
1) கோழித்துண்டுகளை சிறியதாக வெட்டி சுத்தம் செய்யவும்.

2) மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், தக்காளி, உப்பு ஆகியவற்றை நன்றாக மிக்சியில் அரைக்கவும்.

3) பிறகு சிறிய துண்டுகளாக்கிய கோழியை சோளமாவு, அரிசிமாவு, சோயாசாஸ், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை போட்டு கலந்து இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.

4) பூண்டை லேசாக தட்டி வைக்கவும்.


5) கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி தட்டிய பூண்டை போட்டு நன்றாக சிவப்பாகும் வரை பொறிக்கவும்.

6) அப்படியே அதே எண்ணெயில் கோழி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுக்கவும்.

7) அரைத்து வைத்திருக்கும் மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், தக்காளி ,உப்பு ஆகியவற்றை இதனுடன் போடவும்.

8)இந்த கலவையை எண்ணெயில் வதக்கி சோயாசாஸ் சேர்க்கவும். டிப்பிங் சாஸ் ரெடி.


9) பொறித்த பூண்டு, கோழி துண்டுகளை பரிமாறும் தட்டில் அலங்கரித்து வைத்து டிப்பிங் சாஸுடன் சூடாக பரிமாறலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++
மட்டன் சுக்கா:-
===============
தேவையான பொருட்கள்:-
=========================

மட்டன் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு:-
---------------------

 சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
============
1) முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

2) பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.

3) பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

4) பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

5) பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

6) மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால்,  மட்டன் சுக்கா ரெடி..
+++++++++++++++++++++++++++++++++
மீன் பிரியாணி
============
தேவையான பொருட்கள் : -
=====================
அரிசி - முக்கால் கிலோ
மீன் - முக்கால் கிலோ
வெங்காயம் பெரியது - 4
தக்காளி பெரியது - 3
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
புதினா, மல்லித் தழை - தலா 5 கொத்து
எண்ணெய் - 100 மில்லி
தயிர் - அரை கப்
பன்னீர், ரோஸ் வாட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்று
முட்டை - ஒன்று

செய்முறை:-
===========
1) மீனை சுத்தம் செய்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், முட்டை, உப்பு சேர்த்து முறுகாமல் அரைபாகம் வேகுமளவு பொரித்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை சாறு எடுத்து வைக்கவும்.

2) அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை வடிகட்டி அதில் போட்டு வேக வைத்துக் வடித்து கொள்ளவும்.

3) ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

4) வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பிரியாணி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, அவற்றோடு தக்காளி சேர்த்து வதக்கவும்.

5) நன்கு வதங்கியதும் தூள் வகைகள், தயிர், தக்காளி சாஸ், உப்பு, பன்னீர், எலுமிச்சைச் சாறு, அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.

6) கொதித்த பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு மீனை தனியாக எடுத்து விடவும்.

7) வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் போட்டு நன்கு கிளறி விட்டு சாதத்தின் மேல் மீன் துண்டுகளை வைத்து மூடி போட்டு, மேலே கனமான பொருளை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் தம்மில் வைக்கவும். மல்லித் தழை தூவி இறக்கவும்.

8)சுவையான மீன் பிரியாணி ரெடி. விரும்பினால் முந்திரியையும், வெங்காயத்தையும் நெய்யில் வறுத்து அதில் தூவி விடலாம்..
+++++++++++++++++++++++++++++++++++
தலப்பாகட்டு பிரியாணி செய்யும் முறை:-
================================

தேவையான பொருட்கள்:-
===================

சிக்கன் - 1/2 கிலோ
பஸ்மதி அரிசி - 3 கப்
சீரகம் தூள் - 1 மேஜை கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

தனி தனியாக அரைத்து கொள்ள:-
-----------------------------------------------

வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 பெரியது
புதினா + கொத்தமல்லி - 1 கப் சுத்தம் செய்த இலைகள்

இஞ்சி பூண்டு விழுது : (சுமார் 3 மேஜை கரண்டி)

இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1

சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க:-
----------------------------------------------

அரைத்த இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
தனியா தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க:-
-------------------------

எண்ணெய் + நெய் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரியாணி இலை
பச்சை மிளகாய் - 4

செய்முறை:-
----------------

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும். சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும்.

சிக்கனை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைத்தால் நன்றாக இருக்கும். ( சுமார் 2 - 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.

வெங்காயம் + தக்காளி + புதினா கொத்தமல்லியினை தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

இத்துடன் வெங்காயம் விழுதினை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் அத்துடன் மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கிய பிறகு புதினா, கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.

புதினா, கொத்தமல்லி நன்றாக வதங்கி வாசனை மற்றும் கலர் மாறிய பிறகு, சீரக தூள் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.

இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.

அதன் பிறகு, அரைத்து வைத்துள்ள தக்காளியினை சேர்த்த் தட்டு போட்டு மூடி நன்றாக வேகவிடவும்.

பாஸ்மதி அரிசியினை கழுவி சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். (அதற்கு மேல் ஊறவைக்க தேவையில்லை. )

சிக்கன் வெந்த , எண்ணெய் பிரியும் பொழுது ஊறவைத்துள்ள அரிசியினை சேர்த்து கிளறிவிட்டு தட்டு போட்டு மூடி 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.

(கவனிக்க : தண்ணீர் சேர்க்கவில்லை. சிக்கன் க்ரேவியிலே அரிசியினை சேர்க்கின்றோம்.)

2 - 3 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் + 3 - 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு , தட்டி போடு மூடி வேகவிடவும். (பிரஸர் குக்கரில் செய்வது என்றால், 1 விசில் வரும் வரை வேகவிட்டால் போதும்.)

சுவையான பிரியாணி ரெடி.

கவனிக்க:-
-------------

அனைத்து பொருட்களை வதக்கும் பொழுதும் மிதமான தீயில் (Medium Flame) வைத்தே சமைக்க வேண்டும்.
கொடுத்துள்ள அளவு சரியாக இருக்கும்.
சிக்கனில் செய்வதினை விட மட்டனில் செய்தால் சுவையாக இருக்கும்.

அரிசியினை நிறைய நேரம் ஊறவைத்தால் சிக்கனுடன் சேர்த்து வறுக்கும் பொழுது உடைந்துவிடும் என்பதால் 10 நிமிடங்கள் ஊறினால் போதும்...
+++++++++++++++++++++++++++++
சிக்கன் குருமா செய்வது எப்படி..!!

பேச்சுலர்களே! நீங்கள் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் சிக்கன் குருமா செய்து சுவைத்ததுண்டா? ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய சிக்கன் குருமாவை கொடுத்துள்ளது. அந்த சிக்கன் குருமாவின் செய்முறையைப் படித்து, தவறாமல் செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 250 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... துருவிய தேங்காய் - 1/4 கப் பச்சை மிளகாய் - 1 சோம்பு - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் முந்திரி - 3 தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் பிரியாணி இலை - 1 பட்டை - 1/4 இன்ச் கிராம்பு - 2 ஏலக்காய் - 1 கற்வேப்பிலை - சிறிது பூண்டு - 6 பற்கள்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்கி, பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியா வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் பூண்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு தூவி 5-7 நிமிடம் வதப்பி, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் குருமா ரெடி!!!
++++++++++++++++++++++++++++++
சிக்கன் சால்னா செய்வோமா..??

பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு தான் சிக்கன். இந்த சிக்கனை பலவாறு சமைத்து சாப்பிடலாம்.

அதில் ஒன்று தான் சிக்கன் சால்னா. சால்னா என்பது வேறு ஒன்றும் இல்லை, குழம்பைத் தான் அப்படி சொல்வார்கள். இங்கு மிகவும் ருசியாக இருக்கும் சிக்கன் சால்னாவை சிம்பிளாக எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது வறுத்து அரைப்பதற்கு... எண்ணெய் - 1 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 5 கிராம்பு - 5 தேங்காய் - 1 கப் (துருவியது) கசகசா - 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் அதில் வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பின் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, சிக்கனையும் சேர்த்து, மசாலா சிக்கனுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயை குறைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, குக்கரை இறக்கி வைக்க வேண்டும். பின் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கிளறி, 10-15 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் சால்னா ரெடி
++++++++++++++++++++++++++++++++++
கர்நாடகா சிக்கன் ட்ரை ஃப்ரை.!!!
.
சிக்கனில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை.

இந்த ரெசிபியானது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதனை வீட்டில் கூட செய்து முயற்சிக்கலாம். இங்கு அந்த ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 8 (அரைத்தது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு அரைப்பதற்கு... பட்டை - 2 கிராம்பு - 4 மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் சிக்கனை போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி, உப்பு தூவி, அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்து, தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி பரிமாறினால், காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெடி!!!
++++++++++++++++++++++++++++++++
முட்டை பிரட் மசாலா இறைய ஸ்பெஷல்

முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும். இதனை அப்படியே சாப்பிடலாம்.

முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பிரட் - 8 துண்டுகள் முட்டை - 4 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டையை வேக வைத்து, தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதற்குள் மற்றொரு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், பிரட் துண்டுகளின் முனைகளில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊற்றி பொன்னிறமாகவும், மொறுமொறுவென்றும் டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு பச்சை வாசனை போனதும், வாணலியில் ஒவ்வொரு வேக வைத்த முட்டையையும் ஆறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, முட்டையில் மசாலா சேர மெதுவாக பிரட்டி விட வேண்டும். இறுதியில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளையும் சிறு துண்டுகளாக்கி வாணலியில் சேர்த்து ஒரு முறை பிரட்டி இறக்கினால், முட்டை பிரட் மசாலா ரெடி!!!
+++++++++++++++++++++++++++++++
மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்

மீன் - 1/4 கிலோ அரிசி - 2 ஆழாக்கு வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தயிர் - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணை - 1/2 குழிக் கரண்டி

செய்முறை *

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்,  வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.  ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.  தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும்.

தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.  பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.  குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். * சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.
++++++++++++++++++++++++++++++++
வெஜிடபுள் ஆம்லேட் செய்வது எப்படி..!!
தேவையானவை:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், முழு கோதுமை - தலா 50 கிராம், பச்சைமிளகாய் - 2,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, மஞ்சள் தூள்,
மிளகுத் தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை  ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.

பலன்கள்:

கடலைப்  பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்  பருப்பு, முந்திரி   அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது.

பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து நுண் ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.
+++++++++++++++++++++++
புதினா ஆம்லேட்..!!

தேவையான பொருட்கள்:

முட்டை- 2

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

புதினா - தேவையான அளவு

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.

* தவாவை அடுப்பில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவுங்கள்.

* ஆம்லேட்டை சுற்றி எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள்.

* சுவையான வித்தியாசமான புதினா புதினா ஆம்லேட் ரெடி.
+++++++++++++++++++++++++++++++++
சுவையான முட்டை குருமா செய்வது எப்படி...!!
தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1
தக்காளி – 2
முட்டை – 4
பச்சைமிளகாய் – 4
பூண்டு – 4 பற்கள்
கொத்துமல்லி இலை – சிறிது
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு

அரைக்க :

தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 4
சோம்பு – 1டீஸ்பூன்

செய்முறை:

* 3 முட்டைகளை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.

* தேங்காய், முந்திரி, சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டை நீளவாக்கில் நறுக்கவும்.

* கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

* அடுத்து அதில் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.

* மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும்வரை கிளறவும்.

* அரைத்த விழுது சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

* குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.

* சில நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

* சுவையான முட்டைகுருமா ரெடி!
+++++++++++++++++++++++++
மக்ரூன்

தேவையான பொருட்கள்
முட்டையின் வெள்ளை கரு - 3
சீனி - 100 கிராம் (திரித்து சல்லடையில் அரித்து வைக்கவும்)
முந்திரி - 100 கிராம் (திரித்தது)

செய்முறை:

1. முட்டையை பீட்டரில் ஸ்லோவில் வைத்து அடிக்கவும்.
2. சிறிது நுரை வந்தப் பின்பே சீனியை ஒரு ஸ்பூன் போட்டு பீட்டரின் வேகத்தை குறைத்து  வைத்து  அடிக்கவும். பின்பு அதிக ஸ்பீடில் வைத்து  அடிக்க வேண்டும் .
(ஒவ்வொரு  ஸ்பூனாக  சீனியினை   சேர்த்து  அடிக்கவும்)
3. 10 - 12 நிமிடங்கள்  மட்டுமே அடிக்க வேண்டும்  கூடுதலாக ஒரு நொடி  கூட அடிக்கக் கூடாது.
 4. நன்றாக க்ரீம் பதம் வந்ததும் பீட்டரை நிருத்தி முந்திரியை கொஞ்சம்   கொஞ்சமாக சேர்த்து மாவினை ஸ்பூனால்  சேர்க்கவும் (மிகவும்  மென்மையாக மாவுக்கும் கைக்கும் வழிக்காமல்   சேர்க்கவும்)
5. அவனை 150°C  10நிமிடம் முற்சூடு படுத்தவும் .
6. பின் ட்ரேயில் பட்டர் பேப்பர் விரித்து  தயாராக  வைக்கவும்.
7. பட்டர் பேப்பரில் சுருல்  பிடித்து , மாவினை உள்ளே வைத்து மூடி, கீழ்  நுனியை கட் செய்து, கூம்பு  வடிவத்தில் , தயாராக வைத்த ட்ரேயில் பிழியவும்.
8. பின் அவனில் வைத்து 120°C ல் 2மணி நேரம் பேக் பன்னவும்.
9. நேரம்  முடிந்து நன்கு  ஆறிய பின்பே எடுக்க வேண்டும்.

சுவையான கலக்கலான தூத்துக்குடி ஸ்பெசல் மக்ரூன் தயார்.

டிப்ஸ்:

1. ஒரு துளி மஞ்சள் கரு  கூட விலக் கூடாது.
2. கையில் gloves மாட்டிக் கொண்டு வேலை செய்ய வேண்டும். ஏனென்றால் கையில் உள்ள சூட்டினால் பதம் சரியாக வராது. கையில் வெள்ளை கரு படாமல் பார்த்து கொள்ளவும்.
3. பாத்திரத்தில்  ஒரு துளி தண்ணீர் கூட இருக்க கூடாது.
+++++++++++++++++++++++++++++
மீன்குழம்பு

தேவையானவை:

மீன் - 500 கிராம்
வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
தக்காளி - 1 மீடியம் சைஸ்T
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி பொடி - 2 டீஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் – 1 கீறியது
உப்பு தேவையான அளவு
எண்ணைய்  – 1 ½ டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மீனை கழுவி தேவையான அளவில் துண்டுகளாக்கி கொள்ளவும்.

ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு டீஸ்பூன் மல்லி பொடி, 1/4 டீஸ்பூன் மஞ்சள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக கலக்கி மீனை அதிலிட்டு இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.

புளியை கரைத்துக் கொள்ளவும்

ஒரு வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும். மீதியுள்ள வெங்காயத்தையும், தக்காளியையும் பெரிதாக அரிந்து கொள்ளவும்.

தேங்காய், சீரகம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கொஞ்சம் பெரிதாக அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து நைசாக இல்லாமல் கொறகொறப்பாக அரைக்கவும்.

ஒரு கடாய் அல்லது மண்சட்டியில்  எண்ணெய் ஊற்றி மெலிதாக அரிந்த வெங்காயம் போட்டு வதக்கி, மீதமுள்ள மிளகாய், மல்லி, மஞ்சள் பொடிகளை சேர்த்து புளித்தண்ணியை ஊற்றி நன்றாக கலக்கவும்.

வாணலி/மண்சட்டியை அடுப்பில் வைத்து மூடியிட்டு கொதிக்க வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து மீனை ஒவ்வொன்றாக சேர்த்து மூடியிட்டு மீன் பாதியளவு வேகவைக்கவும்.

இப்பொழுது தக்காளி சேர்த்து வேகவிடவும்.
மேலாக எண்ணெய் ஊற்றி மீன் வேகும் வரை காத்திருக்கவும்.

மூடியை திறந்து சிறிய தீயில் எண்ணெய் மேலே மிதந்து வரும்வரை குழம்பு பாதி திக்காக வரும் வேக வைக்கவும்.

இறுதியில் மல்லி இழை இட்டு பறிமாறவும்.

இந்த மீன்குழம்பு சோற்றிற்க்கும், தோசைக்கும் ஏற்றது.
[04:31, 25/6/2016] +91 99407 72384: மிளகு கோழி தொடை வறுவல்


இது வெங்காய சாம்பார்,  ரசம்,  தயிர் சாதம் உடன் சாப்பிட ஏற்ற உணவாகும்.

தேவையான பொருட்கள்

சிக்கன் லெக்பீஸ்  6
எண்ணெய்  4 மேஜைக்கரண்டி
வெங்காயம்  2 பெரியது  ( பொடியாக நறுக்கியது )
பூண்டு  8 பற்கள்
கறிவேப்பிலை  1 கைப்பிடி
பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது )
மிளகாய் தூள்  1 தேக்கரண்டி
புளி கரைசல்  1 தேக்கரண்டி
உப்பு  தேவையான அளவு

சிக்கன் மசாலா
கொத்தமல்லி  விதை  4 தேக்கரண்டி
மிளகு  15
வரமிளகாய்  3
கடுகு  1 தேக்கரண்டி
சீரகம்  1 1/2 தேக்கரண்டி
பட்டை  1 இன்ச்
இலவங்கம்  5
பூண்டு  4 பற்கள்
மஞ்சள்தூள்  1/2 தேக்கரண்டி

செய்முறை

1. வடச்சட்டியில் சிக்கன் மசாலா தயாரிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வறுத்து ஆற வைக்கவும்.  பிறகு மஞ்சள்தூளை சேர்க்கவும்.

2. இப்பொழுது மசாலா பொருட்களை மிக்ஸியில் இட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

3. சிக்கனை  கழுவி கத்தியால் சிக்கனை கீறி கொள்ளவும். 2 மேஜைக்கரண்டி பொடியை சேர்த்து நன்றாக பிசிறி 1 மணிநேரம் ஊறவைக்கவும் .

5. இப்பொழுது வடச்சட்டியில் 1 1/2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு சிக்கன் துண்டுகளாக  சிக்கனை வேகவைக்கவும் .ஒவ்வொரு துண்டுகளையும் 8-10 நிமிடம் வேக விடவும்.

6. அனைத்து துண்டுகளை வேகவைத்த பின்னர்,  ஒரு வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்,  பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். நசுக்கிய பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும்.  பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவையான அளவிலான  உப்புத்தூளை சேர்த்து கொள்ளவும்.

7. வறுத்த சிக்கனை வடச்சட்டியில் சேர்த்து பின்னர் மிளகாய் தூளை சேர்க்கவும் , பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர்  மீதமுள்ள அரைத்த சிக்கன் மசாலாவை  சேர்த்து நன்றாக  5 நிமிடம் வேக வைக்கவும்.

8. இப்பொழுது புளி கரைசலை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக மசாலா, கோழி லெக்பீஸ்ல் படுமாறு நன்றாக கிளறி ட்ரையாக ஆகும் வரை நன்றாக தண்ணீரை சுண்ட வைத்து வெண்ணை  (அ) நெய்யை  1 மேஜைக்கரண்டி சேர்த்து நன்றாக சுருள வறுத்து எடுக்கவும்.
[04:33, 25/6/2016] +91 99407 72384: All in one 👇
[04:33, 25/6/2016] +91 99407 72384: முட்டை குழம்பு

தேவையான பொருட்கள்

முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.

2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைக்கவும்.

3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.

7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.

9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்

தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்னு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கருவேப்பிலை,உப்பு- கொஞ்சம்

செய்முறை

தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.தேவையானதை எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கருவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைவாக வந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து மிளகாய் தூள் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

மிளகாய் வாசம் போனதும் அடுப்பை நிறுத்தவும்,,(தேங்காய் சோம்பு சேர்த்து அரைத்தும் சேர்க்கலாம்)
மிகவும் ஈசியாக செய்யகூடிய தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட தக்காளி குழம்பு ரெடி.

கோழி குழம்பு

தேவையான பொருட்கள்

கோழி- 1 கிலோ
பட்டை-1
ஏலக்காய்-3
லவங்கம்-2
பச்சை மிளகாய்-2
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
வெங்காயம்-2
தக்காளி-3
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
தேங்காய்- கால் மூடி
கறிமசாலா தூள்- 6 ஸ்பூன்

செய்முறை

தேங்காயை நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடைசியில் கறிமசாலா தூளை சேர்த்து அரைத்து (தேங்காயுன் தூள் நன்கு ஒட்டுவதற்காக) பின் நீரில் கரைத்துக்கொள்ளவும்

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,லவங்கம் சேர்க்கவும்
பின் பச்சை மிளகாய், புதினா,கொத்தமல்லி சேர்த்து சுருள விடவும்

வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பின் தக்காளியை சேர்த்து குழைய விடவும்
மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவைக்கு உப்பும் சேர்க்கவும்

நன்கு கொதி வந்த பிறகு கோழியை சேர்க்கவும்.
வெந்ததும் பரிமாறலாம்.

வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்

தக்காளி - 4
வெங்காயம் - 2
தேங்காய் - 3 - 4துண்டு
சாம்பார்ப்பொடி அல்லது வற்றல்குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வற்றல் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறுதுண்டு
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
புளிகரைசல் - 1/2 கப்
மல்லித்தழை - சிறிது

செய்முறை

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காயை மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்

வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், தக்காளி, பெருங்காயம் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து வாணலியை மூடி விடவும். அவ்வப்பொழுது கிளறி விடவும்.

வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும், சாம்பார் பொடி அல்லது வற்றல் குழம்பு பொடி, உப்பு சேர்க்கவும்.
புளிகரைச்சல் சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.

கலந்து விட்டு கொதி வந்ததும் சிம்மில் வைக்கவும்.
எண்ணெய் பிரிந்ததும் வற்றலை பொறித்து சேர்க்கவும்.
நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

இந்த வற்றல் குழம்பு நீர்க்க இருக்காது, கெட்டியாக இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்

கிராமத்து கறி குழம்பு

தேவையான பொருட்கள்

1. ஆட்டுகறி - 3/4 கிலோ
2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
6. மிளகாய் வற்றல் - 10
7. தனியா - 1 மேஜைக்கரண்டி
8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
9. பட்டை, லவங்கம்
10. கசகசா - 1 தேக்கரண்டி
11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
14. உப்பு
15. பூண்டு - 5 பல்
16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை

கறியை தனியாக தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.

இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் வேக வைத்த ஆடுக்கறியை அந்த தண்ணீருடன் தக்காளியுடன் சேர்க்கவும்.

இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.

கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.

மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

சீலா மீன் துண்டுகள் - 8
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
புளி - சிறிதளவு
வத்தல்தூள் - 1 மேசைக்கரண்டி
மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பெரிய பற்கள்
சோம்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
நச்சீரகம் - சிறிதளவு
வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் சோம்பு, இஞ்சி, பூண்டு, சிறிதளவு வெங்காயம் முதலியவற்றை மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும்.
தக்காளி, தேங்காய்ப்பூ, புளி, வற்றல் தூள், மசாலா தூள் முதலியவற்றை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து தனியே வைக்கவும்.

சிறிதளவு தக்காளியை நறுக்கி தனியே வைக்கவும் .
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, நச்சீரகம், விதை நீக்கிய வற்றல் , வெந்தயம், சிறிதளவு வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின்னர் அரைத்து வைத்த இஞ்சி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது மீனை தாளிப்பில் போட்டு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்து மூடி போட்டு அரைத்த மசாலா வாடை மீனில் சேரும்வரை 3 நிமிடங்கள் வேக விடவும்.
மீதி இருக்கும் வெங்காயத்தையும், சிறிதளவு தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

பின் அரைத்த தக்காளி விழுதை மீனில் சேர்த்து புளி வாசனை போகும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

மீனுடன் மசாலா அனைத்தும் நன்றாக சேர்ந்து வெந்து மணம் வந்ததும் இறக்கி விடவும்.

மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்

மட்டன் -- 1/2 கிலோ (சுத்தம் செய்தது)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 என்னம் (நீளமாக கீறியது)
இஞ்சி -- 1 அங்குலம் அளவு (நசுக்கியது)
பூண்டு -- 10 பல் (நசுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
சாம்பார் பொடி -- 2ஸ்பூன்

அரைக்க:

தேங்காய் -- 1 துண்டு
மிளகு -- 3/4 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/4 டீஸ்பூன்
கசகசா -- 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு -- 10 என்னம்

தாளிக்க:

பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 4 என்னம்
அன்னாசிப்பூ -- 1 என்னம்

செய்முறை

குக்கரில் 1 ஸ்பூன் எண்ணைய் விட்டு கறியுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவிடவும்.

பாதி வெந்த பின் சாம்பார் பொடி போட்டு 2 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவை களை தாளித்து தக்காளியை போட்டு நன்கு வதக்கி அதை கொதிக்கும் கல்வையில் கொட்டி குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட் போட்டு ஹைய்யில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 20 நிமிடம் வைக்கவும்.

குழம்பு ரெடி. இது இட்லிக்கு வைக்கும் குழம்பு. தண்ணி குழம்பு என்றே பெயர். மிகவும் சுவையாக 2 இட்லி கூடவே உள்ளே போகும்

நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்

நண்டு -- 1 கிலோ
சாம்பார் பொடி -- 1 1/2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் -- 1 கப் (நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
அரைக்க -- 1:
சோம்பு -- 1 ஸ்பூன்
பூண்டு -- 10 பல்

அரைக்க -- 2 :
தேங்காய் -- 1 மூடி (தனியாக நைசாக அரைக்கவும்)

செய்முறை

அடிகனமான பாத்திரத்தில் எண்ணைய் 2 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் அரைக்க - 1 யை சேர்த்து வாசம் போகும் வரை நன்கு வதக்கி பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் நண்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

2 நிமிடம் கழித்து அரைத்த தேங்காயை ஊற்றி கொதித்து குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
ரெடி.
[04:37, 25/6/2016] +91 80979 96321: Wow many ideas for Tom..
[04:38, 25/6/2016] +91 99407 72384: மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 3 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பல்
பெரிய வெங்காயம் - 4
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
கிராம்பு - 4
பட்டை - 4 துண்டு
ஜாதிக்காய் - பாதி
ஏலக்காய் - 4
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி - 15
தயிர் - அரை கப்
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி
புதினா - ஒரு கட்டு
மல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
உப்பில்லாத வெண்ணெய் -அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு

தாளிக்க:
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

1.மட்டனில் கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

2.பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய சின்ன வெங்காயத்தை லேசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

3.பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

4.பாத்திரத்தை அடுப்பில் வைத்து உப்பில்லாத வெண்ணெய்,நெய், எண்ணெய் மூன்றுடையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

5.வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

6.பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

7.வெங்காயக் கலவை 2 நிமிடங்கள் வதங்கியதும் வறுத்து பொடித்தவற்றை சேர்த்து மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

8.5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

9.தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

10.தேங்காயுடன் இஞ்சி, முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

11.இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் , முந்திரியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ்காகத்தான்.

12.தேங்காய் பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித் தழை சேர்க்கவும்.

13.ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு வேகவிடவும். பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.
[04:39, 25/6/2016] +91 99407 72384: சங்ககாலத்து ஊன் சோறு

எனது நண்பர்களே சொல்லி விட்டார்கள் இதன் சுவை பிரமாதம் என்று.

இந்த ஊன் சோறு தான் பிரியாணிகளின் தாய்,  இந்த ஊன் சோற்றின் பரிணாம வளர்ச்சி தான் பிரியாணியும்,  புலாவும்.

சங்க காலத்தில் அரேபிய வணிகர்கள் நமது திராவிட நாட்டுக்கு வணிகம் செய்ய வந்த போது இங்கு இருந்து சென்றது தான் பிரியாணி.

அரேபியர்களின் பிரதான உணவு ரொட்டி,  சப்பாத்தி ஆகும். அப்படி இருக்கையில் எங்கு இருந்து வந்தது அரிசி உணவின் பழக்க வழக்கம்.  இதுவு‌ம் ஆராய்ச்சியாளர்களின்  கூற்றே ஆகும்.

இந்த ஊன் சோறு  ஊத்துக்குளி பிரியாணியை, கொங்கு பிரியாணியை, திண்டுக்கல் பிரியாணியை ஒத்து உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

இந்த ஊன் சோற்றின் வரலாறு புறநானூறு,  அகநானூறு ல் கூறப்பட்டுள்ளது.  லெமுரியா கண்டனம் இருந்த காலத்திலேயே இந்த ஊன் சோறு கலாச்சாரம் இருந்து உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.

இப்பொழுது சொல்லுங்கள் பிரியாணியின் ( ஊன் சோறு  ) தாயகம் எது என்று? ?

தேவையான பொருட்கள்
சிக்கன்  250 கிராம்
சீரக சம்பா அரிசி  200 கிராம்
தேங்காய் பால்  250 மில்லி
கொத்தமல்லி தூள்  1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்  1/2 தேக்கரண்டி
இலவங்கம்  2
புளித்த பசுந்தயிர்  1/4 கப்
பிரியாணி இலை 1
பட்டை 1 இன்ச்
ஏலக்காய்  2
பசு நெய் 1/2 கப்

அரைக்க தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம்  1 கப்
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
புதினா இலைகள்  1/2 கப்
மிளகு  1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய்  5
சோம்பு  1 1 /2 மேஜைக்கரண்டி
சீரகம்  1 தேக்கரண்டி
பட்டை  1 இன்ச்
இலவங்கம்  3
பூண்டு பற்கள் 8
ஏலக்காய்  3
உப்பு தேவையான அளவு

செய்முறை
1. பிரஷர் குக்கரில் சுத்தமான பசு  நெய்யை ஊற்றவும் காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் போட்டு நன்றாக வதக்கவும்.

2. சிக்கனையும் , இஞ்சி - பூண்டு  விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும் .

3. இப்பொழுது கால் கப் புளித்த பசுந் தயிர்ரை ஊற்றி மஞ்சள் தூளையும் போற்று நன்கு வதக்கவும்.

4. இப்பொழுது அரைக்க தேவையான பொருள்களை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து நன்கு விழுதாக மாற்றவும்.

5. பிறகென்ன கழுவிய சீரக சம்பா அரிசியை பிரஷர் குக்கரில் சேர்க்கவும்.

6. இச்சமயத்துல தேங்காய் பாலை ஊற்றவும் , அதன் பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்  இதனுடன் கொத்தமல்லி தூளையும் தேவையான அளவு உப்புத்தூளையும்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

7. இப்பொழுது  குக்கரின் மூடிவைத்து மூன்று விசில்கள் விடவும்.  மூடியை திறந்த பின்னர்  பசு நெய்யை  குக்கரில் உள்ள  ஊன் சோற்றின் மேல் ஊற்றி நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு  :
1. மட்டன் ஊன் சோறு செய்வதாக இருந்தால்  மட்டனை தனியாக பிரஷர் குக்கரில் சேர்த்து,  தேங்காய்பால்  100 மில்லி , சிறிது தண்ணீர்,  உப்பு,  மிளகு  5 , பச்சை மிளகாய்  3 மஞ்சள்தூள்  1/2 தேக்கரண்டி  சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

2. நாட்டுகோழியாக இருந்தாலும்கூட  குறிப்பு 1 தான் ஃபாலோ செய்ய வேண்டும்.

3. பிரஷர் குக்கரில் தேங்காய் பாலே போதுமானது அரிசியும் கறியும் வேக வைப்பதற்கு தேவைக்கேற்ப தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.
[04:48, 25/6/2016] +91 99407 72384: தொண்டாமுத்தூர் முதலியார் மட்டன் சுக்கா வறுவல்

தேவையான பொருட்கள்
மட்டன் – 350 கிராம்
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 2 அல்லது சின்ன வெங்காயம் – 30
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
மசாலாதூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
பூண்டு(பொடியாக நறுக்கியது) – 5 பல்
அரைக்க
தேங்காய் துருவியது – 2 மேசைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி அல்லது முந்திரிபருப்பு – 5
சோம்பு – 1 தேக்கரண்டி
தாளிக்க
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
கருவேப்பிலை – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி
செய்முறை

1.மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2.குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய், 1 மேசைக்கரண்டி வெங்காயம், சிறிது பூண்டு சேர்த்து வதக்கவும்.

3. மட்டன் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

4.மல்லித்தூள், 1 தேக்கரண்டி மசாலாதூள், பாதி உப்பு , ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மட்டன் சரியாக இல்லையென்றால் 1 /2 கப் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி வேக விடவும்.

5.குக்கரில் இருந்து ஆவி வரும்போது, குறைந்த சூட்டில் அடுப்பை வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

6.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

7.கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவொன்றாகச் சேர்க்கவும்.

8.பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

9.பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
குக்கரை திறந்து மட்டன் துண்டுகளை தனியாக வடித்து எடுத்து வைக்கவும்.

10.மட்டனில் இருந்து வடித்து வைத்த தண்ணீரை வதங்கிக் கொண்டிருக்கும் மசாலாவில் ஊற்றி குழம்பு திக்ககும் வரை வதக்க வேண்டும்.

11.கடைசியாக வேக வைத்த மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
[04:50, 25/6/2016] +91 99407 72384: ஜிஞ்சர் சிக்கன் மசாலா

தேவையான பொருள்கள்:

சதைப்பிடிப்பான கோழிக் கால்கள் - 2
பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - 2 கிராம் (தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க:
இஞ்சி - 5 கிராம் (தோல் நீக்கி நறுக்கவும்)
சின்ன வெங்காயம் - 5 கிராம் (நறுக்கவும்)
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்

செய்முறை:

1.அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து வைக்கவும்.

2.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போக வதக்கவும்.

3.இதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

4.கோழிக்கறியை இதனுடன் சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவைச் சேர்த்து 400 மில்லி தண்ணீர் விட்டு குறைந்த தீயில் கோழிக்கறி வெந்து, மசாலா எல்லாம் ஒட்டி கொள்ளும்போது அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.


காரசாரமான நண்டு குழம்பு

தேவையான பொருட்கள் :

கடல் நண்டு 3 ( சுத்தம் செய்தது 10 துண்டுகள் )
வெங்காயம் 2 பெரியது ( பொடியாக அரிந்தது )
தக்காளி 3 பெரியது ( பொடியாக அரிந்தது )
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 4
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 4 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க
தேங்காய் துருவல் 1/2 கப்
கசகசா 1 மேஜைக்கரண்டி
மிளகு 1 மேஜைக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி

செய்முறை

1. நண்டை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

2. மிக்சியில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.

3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4. அந்த கலவையில் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும் அதை நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

5. இப்பொழுது அந்த கலவையில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம்மசாலா தூளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து 30 நிமிடம் வரை வதக்கவும் .

6. அதில் சுத்தம் செய்யப்பட்ட நண்டு துண்டங்களை சேர்த்து மசாலா கலவையில் சேர்த்து ஒன்றாக கலக்கி வதக்கவும்.

7. மிக்சியில் தேங்காய் துருவல் , கசகசா, மிளகு மற்றும் சோம்பை சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

8. அரைத்த இந்த கலவையை நண்டு மசாலாவில் சேர்க்கவும்.

9. நன்றாக கலக்கி மூடி போற்று மூடி வைத்து சிறு தீயில் வேக விடவும் அதன் பின்னர் கொத்தமல்லி இலைகளை தூவவும் .

10. வெந்ததும் இறக்கி விட்டு சாதத்துடன் பரிமாறவும்.

சோயா மீல் மேக்கர்

குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.

தேவையான பொருட்கள் :

சோயா மீல் மேக்கர் 300 கிராம்  ( நீளவாக்கில் துண்டுகள் )
மோர் 1/2 கப்
 அரிசி மாவு  1 மேஜைக்கரண்டி
மைதா மாவு  1 மேஜைக்கரண்டி
இஞ்சி-பூண்டு  விழுது  1 1/2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மஞ்சள்தூள்  1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்  1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்  2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய்  3 ( பொடியாக நறுக்கியது )
பூண்டு  2 பற்கள்  ( பொடியாக நறுக்கியது )
கறிவேப்பில்லை  1 கொத்து
புதினா இலை  1 கைப்பிடி
சோயா சாஸ்  3/4 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள்  1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
தயிர்  3 மேஜைக்கரண்டி  ( புளிக்காதது )

செய்முறை

1. சோயா மீல் மேக்கர்  நன்றாக கழுவி,  நீளவாக்கில்  மெலிதாக  வெட்டி கொள்ளவும்.

2. இப்பொழுது சோயா மீல் மேக்கர் மோரில் போட்டு உப்புத்தூள் சேர்த்து குறைந்தது  2 மணிநேரம் ஊறவைக்கவும்.

3. பிறகு  மோரை வடித்து விட்டு  இஞ்சி-பூண்டு  விழுதை சேர்த்து சிறிது மஞ்சள்தூளை சேர்த்து,  அரிசி மற்றும்  மைதா மாவை  சேர்த்து, மிளகு தாள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கலந்து  10 நிமிடம் ஊறவைக்கவும்.

4. இப்பொழுது  வடைச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோயா மீல் மேக்கர்  துண்டுகளை போட்டு நடுத்தர தீயில் பொறித்து எடுக்கவும்.  சிறு தீயில்  வைத்தால் கடினமானதாக ஆகிவிடும்.  பெருந்தீயில் வைத்தால் கறுத்து போய் உள்ளே வேகாமல் இருக்கும்.

5. பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். எண்ணெய் வடித்து பாத்திரத்தில்  போட்டு  வைக்கவும்.

6. இப்பொழுது  வடைச்சட்டியில்  எண்ணெய்  2 மேஜைக்கரண்டி  விடவும். பொடித்த பூண்டை  சேர்த்து  நன்கு வதக்கவும், பின்பு  பொடித்த  கறிவேப்பிலை  மற்றும்  பொடித்த பச்சைமிளகாயை சேர்த்து  நன்கு வதக்கவும். பிறகு  புதினா இலைகள்  சேர்த்து வதக்கவும் .

7. பிறகு  வடசட்டியில்  மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூள் சேர்த்து நன்றாக  2 நிமிடம் வதக்கவும்.  இப்பொழுது தயிரையும்  சேர்த்து நன்கு  கலந்து வதக்கவும் . அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து  நன்றாக  வதக்கவும் ஈரதண்மை உறிந்து கொஞ்சம்  கலவை கெட்டியாக ஆனதும். சோயா சாஸ்சை சேர்த்து நன்கு  பிரட்டவும்.

8. இப்பொழுது  வறுத்து வைத்துள்ள சோயா மீல் மேக்கர்   துண்டுகளை வடசட்டியில் சேர்த்து ,நன்கு  மசாலா அனைத்து பகுதிகளிலும் படுமாறு நன்றாக கிளறி  இறக்கவும்.

சுண்டைக்காய் குழம்பு

சுண்டைக்காய் குழம்பு
தேவை

சுண்டைக்காய்(வத்தல்) -100கிராம்
வாழைக்காய் -1
சின்னவெங்காயம் -100கிராம்
பச்சைமிளகாய் -1
பூண்டு -10பல்
புளி கரைசல் -1/2 கப்
தேங்காய் பால் -1/2 கப்
கடுகு -1/4 ஸ்பூன்
வெந்தயம் -1/4ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படி செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைக்காயை வதக்கி வைத்துக்கொள்ளவும்.. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து கிளறி வதக்கி வைத்துள்ள வாழைக்காயை இதில் கலந்து கிளறவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு அதில் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து போதுமான அளவு உப்பு கலந்து கொள்ளவும். பின்னர் சுண்டைக்காய் வத்தல் கலந்து சுண்டைக்காயை 5 நிமிடங்கள் கொதிகவிட்டு தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலை கலந்து இறக்கினால் சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.

Wednesday, 15 June 2016

பொரி உருண்டை

பொரி உருண்டை பண்ணலாம் வாங்க...

தேவையான பொருட்கள்
பொரி - 250 கிராம்குண்டு
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
செய்முறை
1. பொரியை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
2. வெல்லத்தை நன்றாக உடைத்து 1/4 குவளை (டம்ளர்) அல்லது வெல்லம் மூழ்கும் வரை மட்டும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
3. பாகு லேசான கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
4. இறக்கி வைத்த வெல்லப் பாகில் வறுத்த பொரியைப் போட்டு நன்றாக கிளறவும்.
5. வெல்லப்பாகு சூடு ஆறுவதற்குள் பொரி கலவையை தேவையான அளவு உருண்டையாக பிடிக்கவும்.
6. சூடு ஆறினால் உருண்டை பிடிக்க வராது. அப்படி சூடு ஆறிவிட்டால் மீண்டும் அடுப்பில் லேசான தணலில் வைத்து, லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, மீண்டும் உருண்டை பிடிக்கலாம்.

குறிப்பு
1. பொரியை வறுக்கும் போது அடுப்பு தணலை வேகமாக வைத்தால் பொரி சுருங்கி கெட்டித்து விடும்.
2. பாகு காய்ச்சும் போது தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. தண்ணீர் அதிகமானால் பொரி நமுத்து விடும்.
3. கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.

ஜாமுன்

குலாப் ஜாமுன் செய்முறை.
தேவையான பொருட்கள்
பால் – தேவைக்கேற்ப
சர்க்கரை - 2 கப்
பால் பவுடர் - 1 கப்
மைதா - 1 / 2 கப்
சமையல் சோடா – 1 / 2 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
சர்க்கரை பாகு செய்வதற்கு
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய் - 2
செய்முறை
சர்க்கரை பாகு
மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும்.
ஜாமுன்
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்
.
இதில் தேவையான அளவு பால் ஊற்றி லூசாக பிசைந்து கொள்ளவும்.பிசைந்த உருண்டையை சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
உருண்டையை 18 – 20 பாகங்களாகப் பிரித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடு செய்யவும்.
எண்ணெய் சூடானதும் அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.குலாப் ஜாமுன் மெதுவாக அடியிலிருந்து மேலே வர வேண்டும்.
பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும்.
குலாப் ஜாமுனை 30 நிமிடங்கள் சர்க்கரைப் பாகிலையே விட்டு விடவும்.பிறகு எடுத்து பரிமாறலாம்.

காபி

கருப்பட்டி காபி

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1 கப்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
கருப்பட்டி - 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு பொடிக்கு...
உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் - 1/2 கப்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1.முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.
2.பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
3.பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!

கத்திரிக்காய்

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

தேவையான பொருட்கள் :
சின்ன கத்திரிக்காய் – 8
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
பொடி மசாலாவிற்கு :
கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 7
மிளகு – 1/2 டீஸ்பூன்
புளி – சிறிய துண்டு
தேங்காய் – 1/4 கப்
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
• முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
• கத்திரிக்காயை நீரில் கழுவி, மேல் உள்ள காம்பை முற்றிலும் நீக்காமல், பாதியாக வெட்டிவிட்டு, பின் பூமொட்டு விரிவது போன்று 4-6 ஆக கீறிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பொடித்து வைத்துள்ள பொடியை கத்திரிக்காயின் உள்ளே தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் கத்திரிக்காய்களைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
• கத்திரிக்காயானது நன்கு வெந்ததும், அதில் மீதமுள்ள பொடி மசாலாவைத் தூவி கிளறி, சற்று மொறுமொறுவென்று வந்த பின், அதனை இறக்கினால், செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் ரெடி!

Tuesday, 14 June 2016

இஞ்சி சொரசம்

இஞ்சி சொரசம்

தேவையான பொருட்கள்;

இஞ்சி-20 கிராம் (2 இஞ்ச் சைஸில்); கொத்தமல்லி விதை-2 டீ ஸ்பூன்; உலர்ந்த திராட்சை-1 டீ ஸ்பூன்; ஜீரகம்- ½ டீ ஸ்பூன்; ஏலக்காய்-5; தேன்-2 டீ ஸ்பூன்; எலுமிச்சம் பழம் ( மீடியம் சைஸ்) -1.

செய்முறை:

எல்லாப் பொருட்களையும் நைஸாக அரைத்து அத்துடன் 1 டம்ளர் (200 மி.லி) தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையைக் கொதிக்க விடவும். தீயைக் குறைத்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கட்டும். பின்பு, ஆற விட்டு, வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து, 50 மி.லி. தண்ணீர் சேர்த்து கலக்கவும். இது  அஜீர்ணத்துக்கும், பசியின்மைக்கும் மிகவும் நல்ல கை மருந்தாகும். இது இரண்டு வேளைக்குப் போதுமானதாகும்.

குழம்பு Kuzhambu


எண்ணெய் கத்திரக்காய் குழம்பு:

கத்தரிக்காய் -1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2,
தேங்காய் - அரை மூடி (சிறியது)
பூண்டு - 10 பல்,
கடுகு - 1/2  தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
புளிக்குழம்பு பொடி - 4 தேக்கரண்டி,
புளி தண்ணீர் - 2 கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 ஆர்க்கு,
உப்பு - தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

தேவையானப் பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும். கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி  கொள்ளவும். தேவையானப் பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து  கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும்.

கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி  கொள்ளவும்.  அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும். எண்ணெய் கத்திரக்காய் குழம்பு ரெடி.
++++++++++++++++++++++++++++

சின்ன வெங்காயம் -100 கிராம்
தக்காளி -1
பூண்டு -50 கிராம்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லித்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
புளி-தேவையான அளவு

தாளிக்க...

எண்ணெய் -தேவையான அளவு
கடுகு -1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -அரை டீஸ்பூன்


முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோல் உறிக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிய பின் புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்  வெங்காயம், பூண்டை போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின்னர் அதில் தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான காரக்குழம்பு தயார்.

பூண்டு குழம்பு
சுண்டைக்காய் குழம்பு

சுண்டைக்காய்(வத்தல்) -100கிராம்
வாழைக்காய் -1
சின்னவெங்காயம் -100கிராம்
பச்சைமிளகாய் -1
பூண்டு -10பல்
புளி கரைசல் -1/2 கப்
தேங்காய் பால் -1/2 கப்
கடுகு -1/4 ஸ்பூன்
வெந்தயம் -1/4ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படி செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைக்காயை வதக்கி வைத்துக்கொள்ளவும்.. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து கிளறி வதக்கி வைத்துள்ள வாழைக்காயை இதில் கலந்து கிளறவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு அதில் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து போதுமான அளவு உப்பு கலந்து கொள்ளவும். பின்னர் சுண்டைக்காய் வத்தல் கலந்து சுண்டைக்காயை 5 நிமிடங்கள் கொதிகவிட்டு தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலை கலந்து இறக்கினால் சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.

++++++++++++++++++++++++
பூண்டு- கறிவேப்பிலை வெங்காய குழம்பு:!!!

தேவையான பொருட்கள்:

பூண்டு-5 பல்; கறிவேப்பிலை-1 கப்; வெந்தயம்-1 தேக்கரண்டி; கடுகு-1/2 தேக்கரண்டி; காய்ந்த மிள்காய்-4; சின்ன வெங்காயம்-1 கப்; தக்காளி-1; தனியா பொடி-1 மேஜைக் கரண்டி; எண்ணெய்-1 மேஜைக் கரண்டி; புளி-எலுமிச்சை அளவு; உப்பு-தேவையான அளவு;

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை வறுத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணையை வாணலியில் விட்டு, கடுகு மற்றும் வெந்தயம் தாளித்து, பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு சுருள வதக்கவும். பின் புளியைக் கரைத்து விட்டு, அரைத்த கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இறக்கும்போது, தனியாத் தூளை சேர்க்கவும்.

இது பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் ஏற்றது.

கஞ்சி / சூப். Soup


பூண்டுக் கஞ்சி

தேவையானவை:

 அரிசி - ஒரு கப்
 பூண்டு - 4
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பசும்பால் - ஒரு கப்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை தண்ணீரில் அலசி, அதனுடன் உரித்த பூண்டு, சீர‌கம் மற்றும் 3 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் குழைய‌ வேக‌விடவும். அரிசி குழைய வெந்ததும் மூடியைத் திறந்து பால் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். கலவை கஞ்சி பதத்துக்கு வந்தவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும். பசும்பாலுக்கு பதிலாக தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். தேங்காய்ப்பால் சேர்ப்பதாக இருந்தால், அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.

குறிப்பு:

உணவு சரியாக செரிமானம் ஆகாததினால் ஏற்படக்கூடிய வாய்வு பிரச்னைகளை எல்லாம் சரிப்படுத்தி, உணவு செரிமானத்தைச் சீராக்கும் கஞ்சி இது
++++++++++++++++++++++++++++++++++
பாசிப்பயறு-கருப்பட்டிக் கஞ்சி

தேவையானவை:

 பாசிப்பயறு - அரை கப்
 கருப்பட்டி - 300 கிராம்
 சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்
 ஏலக்காய் - 3
 உப்பு - கால் டீஸ்பூன்

செய்முறை:

பாசிப்பயறை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்ததில் பாதியை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். கருப்பட்டியைத் தூளாக்கி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டு காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். வடிக்கட்டிய கருப்பட்டி சிரப்பை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் வேகவைத்து அரைத்த பயறுக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையெனில், சிறிது தண்ணீர் ஊற்றி, கஞ்சி பதத்துக்குக் கொண்டு வரவும்.

4 நிமிடம் மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்துக் கஞ்சியைக் கொதிக்கவிடவும். பிறகு மீதம் இருக்கும் வெந்த பயறைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான கருப்பட்டிக் கஞ்சி தயார்.
+++++++++++++++++++++++++++++++++
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்

தேவையானவை:

 நறுக்கிய பெரிய பீன்ஸ் / அவரைக்காய் - ஒரு கப்
 நறுக்கிய கேரட் - ஒரு கப்
 நறுக்கிய ஃபிரெஞ்ச் பீன்ஸ் - ஒரு கப்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
 நறுக்கிய தக்காளி - 3
 புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 இஞ்சி - ஒரு அங்குல நீளமுள்ள துண்டு
 பூண்டு - 5 பல்
 நசுக்கிய மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
 நசுக்கிய சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
 நசுக்கிய சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை நன்கு கழுவி உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டுப் பல்லை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில், குக்கரை வைத்து காய்கறிகள், இஞ்சி மற்றும் பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, தக்காளி உட்பட தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும். கூடவே காய்கறிகளை விட மூன்று அங்குலம் அதிகமாக தண்ணீர் ஊற்றவும். குக்கரை அடுப்பில் வைத்து பிரஷர் வெளியே வரும்போது வெயிட்டை போடவும். பிறகு அடுப்புத் தீயைக் குறைத்து, 20 நிமிடங்கள் குறைந்த தீயிலேயே வேக விடவும்.
அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறக்கவும். காய்கறிகளில் உள்ள தண்ணீரை வடிகட்டி பரிமாறும்போது உப்பு மற்றும் கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:

சூப்பில் கடிப்பதற்கு காய்கறிகள் வேண்டும் என்று நினைப்பவர்கள், காய்கறிகளை வடிகட்டாமல், அப்படியே சூப்பில் சேர்த்துக் குடிக்கலாம். நறுக்கும்போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டுக் கஞ்சி

தேவையானவை:

 அரிசி - ஒரு கப்
 பூண்டு - 4
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பசும்பால் - ஒரு கப்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை தண்ணீரில் அலசி, அதனுடன் உரித்த பூண்டு, சீர‌கம் மற்றும் 3 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் குழைய‌ வேக‌விடவும். அரிசி குழைய வெந்ததும் மூடியைத் திறந்து பால் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். கலவை கஞ்சி பதத்துக்கு வந்தவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும். பசும்பாலுக்கு பதிலாக தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். தேங்காய்ப்பால் சேர்ப்பதாக இருந்தால், அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.

குறிப்பு:

உணவு சரியாக செரிமானம் ஆகாததினால் ஏற்படக்கூடிய வாய்வு பிரச்னைகளை எல்லாம் சரிப்படுத்தி, உணவு செரிமானத்தைச் சீராக்கும் கஞ்சி இது
+++++++++++++++++++++++++++++
உடலுக்கு வலிவு தரும் வாழைத்தண்டு சூப். .

தேவையானவை:

வாழைத்தண்டு – ஒரு துண்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

• வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.

• கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.

• வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.


ஃபிரெஞ்சு ஆனியன் சூப்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை வெங்காயம் - 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் - 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், சர்க்கரை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: 'மைக்ரோவேவ் அவன்’-ஐ 'ப்ரி-ஹீட்’ செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
குறிப்பு: 'மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம். 
காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி - தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு - 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை - ஒரு டீஸ்பூன், பாஸில் இலை - ஒரு டீஸ்பூன், மிளகு - 3 டீஸ்பூன், லவங்கம் - 2, பட்டை - ஒன்று, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 - 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.
--------------------------------------------------------------------------------------------------- 
வெண்டைக்காய் சூப்
தேவையானவை: வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.
தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).
காய்கறி சூப்
தேவையானவை: பீன்ஸ் - 10, கேரட் - ஒன்று, கோஸ் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - ஒரு பல், வெண்ணெய், மைதா மாவு (அ) சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பால் - ஒரு சிறிய கப், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.
பாதாம் சூப்
தேவையானவை: பாதாம் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, செலரி, பாஸில் இலை - சிறிதளவு, காய்கறி வேகவைத்த தண்ணீர் - அரை லிட்டர், பால் - ஒரு கப், பாதாம் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில், உரித்த பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும். வெந்தவுடன் இறக்கி, மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை அடுப்பில் வைத்து, மிக சிறு தீயில் சிறிது நேரம் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும். இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே வறுத்த பாதாமை நறுக்கி சேர்த்துப் பரிமாறவும்.
காளான் கிரீம் சூப்
தேவையானவை: காளான் - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய பூண்டு - 2 பல், பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, வொயிட் சாஸ் - 100 மில்லி, வெண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
வொயிட் சாஸ் செய்வதற்கு: வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மைதா - 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை லிட்டர், உப்பு - சிறிதளவு.
செய்முறை: அடி கனமான கடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் மைதாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். பின் அடுப்பை அணைத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கட்டியில்லாமல் கரைத்து மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். இதில் சிறிதளவு உப்பு போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால்... வொயிட் சாஸ் ரெடி.
வேறொரு காடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கும்போது பூண்டு, பிரிஞ்சி இலை, தைம் இலை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன்... வொயிட் சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.
மூங்கில் ரைஸ் வெஜ் சூப்
தேவையானவை: மூங்கில் ரைஸ் ('காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப், கேரட் - ஒன்று (நறுக்கவும்), வேக வைத்த பட்டாணி - ஒரு கப், பீன்ஸ் - 5 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 2 பல், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: மூங்கில் ரைஸில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.
கடாயில் வெண்ணெயை காயவைத்து... பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் ரைஸை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.
பானிபூரி சூப்
தேவையானவை: சிறு பூரி - 10 (டிபார்ட்மென்ட் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), உருளைக்கிழங்கு - 100 கிராம் (வேக வைத்து எடுத்து வைக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி அளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது), பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், வேக வைத்த பருப்புத் தண்ணீர் - 2 கப், புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - 2 டீஸ்பூன், பூண்டு - ஒரு பல், க்ரீம், ஓமப்பொடி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்புத் தண்ணீர், புளிக் கரைசல், வெல்லம், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, அதில் அரைத்த புதினா விழுதை சேர்க்கவும். இதனுடன் கறுப்பு உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் வேக வைத்த உருளைகிழங்கை நறுக்கிப் போட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பூரியை நொறுகிப் போட்டு, ரெடி செய்த சூப்பை ஊற்றி, மேலே சிறிது கிரீம் மற்றும் ஓமப்பொடி தூவி பரிமாறவும்.
எலுமிச்சை சூப்
தேவையானவை: எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.
மின்ஸ்டோன் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம், வெங்காயம் - 2, பிரிஞ்சி இலை - ஒன்று, செலரி, தைம் இலை, பாஸில் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), துருவிய சீஸ் - சிறிதளவு, டர்னிப் - ஒன்று, தக்காளி - 3, பூண்டு - 2 பல், ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாஸ்தா - ஒரு கப் (வேக வைத்தது), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை தோலுரித்து, மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை நன்கு வறுக்கவும். அதனுடன் தைம் இலை, பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், டர்னிப் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி, வெந்தவுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். வேக வைத்த காய்கறி தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, பாஸில் இலை, வேக வைத்த பாஸ்தா சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி, அதன் மேல் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
மிளகு சூப்
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு - 3 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - 3 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கறிப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம்பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
ஹாட் அண்ட் சோர் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, வினிகர் - கால் கப், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12, அஜினமோட்டோ - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயில் பாதி அளவு எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியவுடன் சிறிதளவு வினிகர், கெட்சப் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மீதம் உள்ள மிளகாயை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடித்த மிளகாயை போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஒன்றன்பின் ஒன்றாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். இதில் மீதமுள்ள வினிகர், அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், காய்கறி தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ சேர்த்து கொதிக்க வைக்கவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து கட்டி விழாமல் கொதிக்கவிடவும். இறக்கும்போது மறுபடியும் அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி... மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு முட்டையை அடித்து கலக்கி இதில் சேர்த்துக் கிளறி பரிமாறலாம்.
ஆஸ்பரகஸ் சூப்
தேவையானவை: ஆஸ்பரகஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை டின், கிரீம் - ஒரு கப், மைதா மாவு, வெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, உருகியதும் மைதா மாவை சேர்த்து நன்கு கலக்கி, உப்பு, ஆஸ்பரகஸ் சேர்த்து, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். பரிமாறும்போது கிரீம் சேர்க்கவும்.
உருளைக்கிழங்கு சூப்
தேவையானவை: வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒரு கப் வெண்ணெய், மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கிரீம், சீஸ், பால் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மைதா மாவை சிறிது சிறிதாக தூவி வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டியில்லாமல் கிண்டி மறுபடியும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். (சூப் கெட்டியாக இருந்தால் காய்கறி வேக வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்). இதில் உப்பு, மிளகுத்தூள், சீஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை வைத்திருந்து இறக்கி, கிரீமுடன் பரிமாறவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சேர்த்தும் சூப் செய்யலாம்.
ஆவகாடோ கார்ன் சூப்
தேவையானவை: ஆவகாடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒன்று, உதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப், பூண்டு - 2 பல், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: ஆவகாடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும். மிக்ஸியில்... ஆவகாடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதில் அரைத்த ஆவகாடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து... அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி... பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
குறிப்பு: ஆவகாடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும்.
தக்காளி சூப்
தேவையானவை: தக்காளி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், பால், நறுக்கிய கொத்தமல்லி தழை - தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி... அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, மற்றொரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி... உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.
தக்காளி கிரீம் சூப்
தேவையானவை: தக்காளி - 3, வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் - சிறிதளவு, பூண்டு - ஒரு பல், பாஸில் இலை, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, உருகியதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, செலரி, குடமிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பாஸில் இலை, மிளகுத்தூள் சேர்த்து, கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுக்கவும்.
மற்றொரு கடாயில் மீதமுள்ள வெண்ணெயை போட்டு, உருகியதும் மைதா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடிகட்டி வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, கிரீம் மற்றும் வறுத்த பிரெட் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.
மேன்சௌ சூப்
தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, கோஸ் - 100 கிராம், பேபி கார்ன் - 2, வெங்காயத்தாள் - சிறிதளவு, வினிகர், தக்காளி சாஸ், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துகேற்ப, அஜினமோட்டோ - சிறிதளவு, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், சில்லி பேஸ்ட் - காரத்துக்கேற்ப, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் அதில் சில்லி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு, சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, உப்பு, மிளகுதூள் சேர்த்துக் கலந்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறி, நன்கு கொதித்தவுடன் இறக்கி... மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
குறிப்பு: சில்லி பேஸ்ட் தயாரிக்க... வெங்காயம் ஒன்று, பூண்டு ஒரு பல், தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த காய்ந்த மிளகாய் ஐந்து, புளி நெல்லிக் காய் அளவு எடுத்து... தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
புரூக்கோலி கிரீம் சூப்
தேவையானவை: புரூக்கோலி - ஒரு கப், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெண்ணெய், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), தைம் இலை - சிறிதளவு, கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தைம் இலை சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மைதா சேர்த்து வறுக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு புரூக்கோலி சேர்த்து வேகவிடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும். வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி... கிரீம், துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.
பப்பாளி இஞ்சி சூப்
தேவையானவை: பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி... வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... சூப் கப்பில் ஊற்றவும். அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
க்ளியர் சூப்
தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா ஒன்று, செலரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, முட்டை - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முட்டையை உடைத்து வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீர், நறுக்கிய வெங்காயம், கேரட், இஞ்சி - பூண்டு, முட்டை - வினிகர் கலவை, உப்பு எல்லாம் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து கரண்டியால் கிளறாமல் கொதிக்க வைத்து... பிறகு மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். காய்கறி, முட்டை வெந்து மேலே வரும்போது இறக்கி, சூப் கப்பில் ஊற்றி பரிமாறவும். விருப்பப்பட்டால் வடிகட்டியும் பரிமாறலாம்.
திடீர் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 50 கிராம், நறுக்கிய பூண்டு - இஞ்சி - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), செலரி - ஒன்று, புரூக்கோலி - சிறிதளவு, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில், கொத்தமல்லி தழை - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை காயவைத்து... நறுக்கிய பூண்டு - இஞ்சியை வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், செலரி, புரூக்கோலி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சோள மா¬வை கரைத்து ஊற்றி கெட்டியாக்கி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
முளைகட்டிய நவதானிய சூப்
தேவையானவை: முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், புளிக்காத கெட்டி தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
பருப்பு சூப்
தேவையானவை: வேக வைத்த பருப்பு - ஒரு கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, பிரெட் ஸ்லைஸ் - 2 ( 'கட்’ செய்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்), பனீர் - 50 கிராம் (எண்ணெய் பொரித்தெடுக்கவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் பதத்துக்கு வந்தவுடன் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறும்போது நறுக்கிய கொத்த மல்லி தழை, பொரித்த பனீர், வறுத்த பிரெட் சேர்க்கவும்.
பட்டாணி சூப்
தேவையானவை: பச்சைப் பட்டாணி - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், காய்கறி வேக வைத்த தண்ணீர், கிரீம், பால் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, வெங்காயம் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து, சோள மாவை பாலில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள், கரம்மசலாத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, சூப் கப்பில் ஊற்றி, மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
சிம்பிள் சூப்
தேவையானவை: காய்கறிகளின் தோல், காம்பு, தண்டு (கழுவிக் கொள்ளவும்), பேரிக்காய் தோல் - தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, வொயிட் சாஸ் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயதாள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய காய்கறி தோல், தண்டு, இலை, பேரிக்காய் தோல்களை கழுவி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வொயிட் சாஸ், உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி... கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையானவை: காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், நறுக்கிய கேரட் - 2 டீஸ்பூன், கோஸ் - 50 கிராம், உதிர்த்த ஸ்வீட் கார்ன் - 3 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் - தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - அரை டீஸ்பூன், அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், வெங்காயத்தாள் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும், பாதி வெந்தவுடன்... உப்பு, மிளகுத்தூள், வினிகர், அஜினமோட்டோ சேர்த்து, சோள மாவை தண்ணீரில் கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கெட்டியாக வரும்போது இறக்கி, கிண்ணத்தில் ஊற்றி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.
டோஃபு பாலக் சூப் 
தேவையானவை: பாலக் கீரை - ஒரு கப், டோஃபு (சோயா பனீர்) - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு, கோஸ் - 100 கிராம், நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் (அ) வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காடாயில் எண்ணெய் (அ) வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி - பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பூண்டு சூப்
தேவையானவை: முழுப்பூண்டு - 2 (தோலுரிக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் - அரை லிட்டர், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், கிரீம் அல்லது கெட்டித் தயிர் - சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மைதாவையும் சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, கிரீம் (அ) தயிர் சேர்த்துப் பரிமாறவும்.
வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்
தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் (எல்லாம் சேர்த்து வேக வைத்தது), நூடுல்ஸ் - தலா ஒரு கப் (வேக வைக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெங்காயம் - ஒன்று, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - ஒரு பல், வெங்காயத்தாள் - ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை போட்டு, உருகியதும் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி... கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.
பீட்ரூட் சூப்
தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப் , கேரட் துருவல் - அரை கப் , வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டி... உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் கிரீம் சேர்த்துப் பரிமாறலாம்.
+++++++++++++++++++++++++++++++
மிளகு சூப்..!!!

தேவையானவை:

துவரம்பருப்பு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு - 3 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - 3 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

கறிப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம்பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++
எலுமிச்சை சூப்..!!!

தேவையானவை:

எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை:

 பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.
++++++++++++++++++++++++++++++
வெண்டைக்காய் சூப்...!!!

தேவையானவை:

 வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.
தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).
+++++++++++++++++++++++++++++++++
கிரீமி மஷ்ரூம் சூப் / காளான் சூப்.
தேவையான பொருட்கள்
காளான்  –  10
பெரிய வெங்காயம்  –  1
சீஸ் துருவல்  –  1  தேக்கரண்டி
பூண்டு  –  4  பல்
பால்  – 1  கப்
வெண்ணெய்  –  2  தேக்கரண்டி
மிளகுத்தூள்  –  விருபத்திற்கேற்ப
உப்பு  – தேவையான அளவு
செய்முறை
காளான்களை நன்கு  கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு முதலியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் வெண்ணையை உருக்கி, பூண்டு சேர்த்து வதக்கி, வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், காளான் சேர்த்து வதக்கி, 3  கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேக விடவும்.
வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து , மிக்சியில் அரைத்து வாடி கட்டிக் கொள்ளவும்.
வடிகட்டியதை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது பாலில் கார்ன்ப்ளார் கரைத்து சேர்க்கவும்.
இது நன்கு கொதிக்கும் போது இறக்கி, சீஸ் துருவல், மிளகுத்தூள் சேர்க்கவும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் இரண்டு காளான்களை மெல்லியதாக நறுக்கி, அரை தேக்கரண்டி வெண்ணையில் வதக்கி சூப்பில் மிதக்க விடலாம்.