புழுங்கலரிசி முறுக்கு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
புழுங்கல் அரிசிகால் கிலோ
பொட்டுக்கடலைஅரை கப்
காய்ந்த மிளகாய்10- 15
தேங்காய்ப்பால்ஒரு கப்
எள்2 டீஸ்பூன்
ஓமம்3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்3 சிட்டிகை
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசியை நீர் விட்டு நன்றாக ஊறிய பிறகு களைந்து அரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து தேங்காய்ப்பால் விட்டு கிரைண்டரில் மைய அரைக்க வேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக மாவாக்கி கொள்ளவும்.
அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, எள், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, மாவினை பெரிய சல்லிக் கரண்டியின் மேல் பாகத்தில் பிழிந்து அதனை எண்ணெயில் போடவும்.
சல்லிக்கரண்டியின் மேல் எண்ணெய் தடவினால் கரண்டியினை திருப்பும் போது எளிதாக மாவு எண்ணெயில் விழுந்து விடும். மாவு சிவந்ததும் எடுத்தால் புழுங்கலரிசி முறுக்கு தயார்.
++++++++++++++++++++++++++++++++
அச்சு முறுக்கு
தேவையானப்பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
மைதா - 1/4 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 சிட்டிகை
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும். எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில் விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடக்கும்) எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும். உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.
இலேசான இனிப்புடன் கூடிய இந்த முறுக்கு "அச்சப்பம்" என்றும் "ரோஸ் குக்கி" என்றும் அழைக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் இதை செய்வார்கள்.
+++++++++++++++++++++++++++++
உளுந்து - ஒரு கப்
அரிசி மாவு - 3 - 3 1/2 கப்
எள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரித்தெடுக்க
முறுக்கு செய்வதற்கு மேற்சொன்ன பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உளுந்தை நன்றாக கழுவி ஒன்றுக்கு மூன்று கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (உளுந்து : தண்ணீர் = 1:3). வேக வைத்த உளுந்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் உளுந்து நன்றாக மசிந்துவிடும்.
அரைத்த உளுந்து மாவுடன், அரிசி மாவு, எள், சீரகம், வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பிறகு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதில் அரிசி மாவு 3 முதல் 3 1/2 கப் அளவு தேவைப்படும்.
முறுக்கு அச்சில் பிசைந்த மாவை போட்டு முறுக்குக்காக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்த முறுக்கை போட்டு இருப்புறமும் வேக விட்டு எடுக்கவும்.
எளிதில் செய்துவிடக்கூடிய சுலப முறுக்கு ரெடி.
++++++++++++++++++++++++++++++
பச்சரிசி மாவு -- 4 பங்கு (நனைத்து காய வைத்தது)
உளுந்து -- 1 பங்கு (சிவப்பாக வறுத்தது)
காய்ந்த மிளகாய் -- 10 என்னம்
கட்டி பெருங்காயம் -- 1ஸ்பூன் (ஊற வைத்த தண்ணீர்)
வெண்ணைய் -- 1/2 கப்
உப்பு -- தே.அ
எண்ணை
அரிசி, உளுந்து இரண்டையும் மிக்ஸியில் நைசாக பொடித்து சலித்தெடுக்கவும்.
காய்ந்த மிளகாய்,உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
பின் அரிசி மாவு கலவை , மிளகாய் கலவை, வெண்ணையை கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும்.
பின் முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுக்கவும்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
புழுங்கல் அரிசிகால் கிலோ
பொட்டுக்கடலைஅரை கப்
காய்ந்த மிளகாய்10- 15
தேங்காய்ப்பால்ஒரு கப்
எள்2 டீஸ்பூன்
ஓமம்3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்3 சிட்டிகை
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசியை நீர் விட்டு நன்றாக ஊறிய பிறகு களைந்து அரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து தேங்காய்ப்பால் விட்டு கிரைண்டரில் மைய அரைக்க வேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக மாவாக்கி கொள்ளவும்.
அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, எள், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, மாவினை பெரிய சல்லிக் கரண்டியின் மேல் பாகத்தில் பிழிந்து அதனை எண்ணெயில் போடவும்.
சல்லிக்கரண்டியின் மேல் எண்ணெய் தடவினால் கரண்டியினை திருப்பும் போது எளிதாக மாவு எண்ணெயில் விழுந்து விடும். மாவு சிவந்ததும் எடுத்தால் புழுங்கலரிசி முறுக்கு தயார்.
++++++++++++++++++++++++++++++++
அச்சு முறுக்கு
தேவையானப்பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
மைதா - 1/4 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 சிட்டிகை
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும். எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில் விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடக்கும்) எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும். உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.
இலேசான இனிப்புடன் கூடிய இந்த முறுக்கு "அச்சப்பம்" என்றும் "ரோஸ் குக்கி" என்றும் அழைக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் இதை செய்வார்கள்.
+++++++++++++++++++++++++++++
உளுந்து - ஒரு கப்
அரிசி மாவு - 3 - 3 1/2 கப்
எள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரித்தெடுக்க
முறுக்கு செய்வதற்கு மேற்சொன்ன பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உளுந்தை நன்றாக கழுவி ஒன்றுக்கு மூன்று கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (உளுந்து : தண்ணீர் = 1:3). வேக வைத்த உளுந்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் உளுந்து நன்றாக மசிந்துவிடும்.
அரைத்த உளுந்து மாவுடன், அரிசி மாவு, எள், சீரகம், வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பிறகு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதில் அரிசி மாவு 3 முதல் 3 1/2 கப் அளவு தேவைப்படும்.
முறுக்கு அச்சில் பிசைந்த மாவை போட்டு முறுக்குக்காக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்த முறுக்கை போட்டு இருப்புறமும் வேக விட்டு எடுக்கவும்.
எளிதில் செய்துவிடக்கூடிய சுலப முறுக்கு ரெடி.
++++++++++++++++++++++++++++++
பச்சரிசி மாவு -- 4 பங்கு (நனைத்து காய வைத்தது)
உளுந்து -- 1 பங்கு (சிவப்பாக வறுத்தது)
காய்ந்த மிளகாய் -- 10 என்னம்
கட்டி பெருங்காயம் -- 1ஸ்பூன் (ஊற வைத்த தண்ணீர்)
வெண்ணைய் -- 1/2 கப்
உப்பு -- தே.அ
எண்ணை
அரிசி, உளுந்து இரண்டையும் மிக்ஸியில் நைசாக பொடித்து சலித்தெடுக்கவும்.
காய்ந்த மிளகாய்,உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
பின் அரிசி மாவு கலவை , மிளகாய் கலவை, வெண்ணையை கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும்.
பின் முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுக்கவும்
No comments:
Post a Comment