Wednesday, 18 May 2016

மசாலா பொரி

மசாலா  பொரி

தேவையான பொருட்கள்:
பொரி - ஒரி கப்
வேர்க்கடலை - ஒரு கப்
காரபூந்தி (அ) மிக்சர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பெங்களூர் தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
வெள்ளரிக்காய் - ஒன்று
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
சிறிய எலுமிச்சை பழம் - ஒன்று

செய்முறை :
1.பொரி மற்றும் காரபூந்தியை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும்.

2.வேர்க்கடலையை வேக வைத்து தோலுரித்து தயாராக வைக்கவும்.

3.வெங்காயம், தக்காளி, கேரட், வெள்ளரிக்காய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

4.ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழந்து நன்கு கிளறி விடவும்.

5.பொரி கலவையை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பரிமாறவும். எளிதில் செய்ய கூடிய மசாலா வேர்கடலை ரெடி.

No comments:

Post a Comment